அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

08 December 2012

எங்கள் முஹம்மத்(ஸல்) -அழகிய முன் மாதிரி..!





ஒப்பற்ற இறைவனுக்கு..!
...

ஒளிமையமான இறைவனுக்கு..!

உலகம் நிறைக்க...

புகழ் சேர்த்த உத்தமர்..

தூய்மையான இறைவனுக்கு..!

தூதராய் பணியாற்றிய...

நபித்துவத்தின் நன்மாராயம்..!

படைப்புகளை வணங்கி வந்த..

மனித சமூகத்தில்..

படைத்தவனை வணங்கச்சொன்ன..

இறுதி இறைத்தூதர்...!

சொல்லெறிந்து தூற்றியபோதும்..

கல்லெறிந்து பல் உடைந்தபோதும்..

சத்தியத்தின் பால் -அழைத்த...

சிறந்த போதகர்...!

அல்லாஹ்வின் அடிமை என்று..

அழைக்கச்சொல்லி மகிழ்ந்த..

மாமனிதர்...

நீதியை நிலைனாட்டி..

நீதியை பேணச்சொல்லி...

நீதியாகவே வாழ்ந்த வரலாறு..!

சத்தியமார்க்கத்தின்..

சாதனை பெட்டகம்...

அறிவுடையோருக்கு..

நேர்வழிக்காட்டி..

அச்சமூட்டி எச்சரிக்கை செய்த...

எங்கள் முஹம்மத்(ஸல்)

அழகிய முன் மாதிரி...

07 December 2012

டிசம்பர் -6- மறக்கமுடியுமா...



பாபர் மசூதியை மட்டுமா இடித்தீர்கள்..

இந்தியாவின் ஜனநாயகத்தை இடித்தீர்கள்..

...
மத நல்லிணக்கத்தை இடித்தீர்கள்...

நீதி மன்றங்கள் மீது நாங்கள் வைத்திருந்த..

நம்பிக்கையை இடித்தீர்கள்...

இடித்தவர்களுக்கு இரண்டு பங்கும்..

இழந்தவர்களுக்கு ஒரு பங்கும் வழங்கிய..

நீதிமன்ற தீர்ப்பு உலகில் தலைகுனியவைத்தது...

அரசியல் தலைவர்கள் எல்லாம் ஓட்டு பொருக்கிகளாய்..

இருந்துவிடாமல் பாபர் மசூதியை மீட்க உங்கள் குரலும்..

ஒலிக்கவேண்டும் நீதியின் பக்கம் மாற்று மத சகோதரர்களே.!

நடு்நிலை கொண்ட ஊடகங்களே உங்கள் குரலும் இன்றே..

இப்பவே ஒலிக்கவேண்டும் பாபர் மீட்ககும் வரை....

எங்கள் குரல் ஓயாது் எங்கள் உள்ளத்தை விட்டு அகலாது..

18 September 2012

எங்கள் முஹம்மத்..

எங்கள் முஹம்மத்..

அழகிய முன் மாதிரி..!

படைத்தவனின் தூதர்..

...
மனிதர்களில் மாணிக்கம்...

படைப்புகளை விடுத்து..

படைத்தவனை வணங்கச்சொன்ன..

பண்பாளர்...!

எழுத படிக்க தெரியாத...

ஏகன் தீட்டிய வைரம்..!

சத்திய மார்க்கத்தை..

சாந்திய வழியில் தந்த..

வாழ்வியல் வசந்தம்..!

கல் சிலை வணங்கி வந்து..

தீண்டாமை தழைத்த..

சமுதாயத்தை சீர்படுத்திய..

சமத்துவ எழுச்சி...

ஒப்பற்ற இறைவனின்..

ஓர் இறை கொள்கையை..

எளிமையில் எடுத்துரைத்த...

எம்பெருமானார்...

மனிதகுல ஒழுக்கத்திற்கு..

மாமருந்து...

பகுத்தறிவு விடியல்..

ஐந்து கடமை தந்து...

பேணி பேணச்சொன்ன..

பத்தரை மாதத்து தங்கம்...

எங்கள் முஹம்மத்..!

அழகிய முன் மாதிரி...

12 August 2012

யா அல்லாஹ்..!



நீ ஒளிமையமானவன்..!

நீ தூய்மையானவன்..!

...
நீ பேரருளாலன்..!

நீ பேரன்புடையோன்..!

நீ இரக்கமுடையோன்..!

நீ வல்லமையுடையோன்..!

நீ எந்த தேவையும் -அற்றவன்..!

நீ பெரும்கொடையாளன்..!

நீ செவியேற்பவன்..!

நீ பார்த்துகொண்டியிருப்பவன்..!

நீ நன்குகறிந்தவன்..!

நீ அர்ஷின் அதிபதி..!

நீ ஏகத்துக்கும் ஆட்சியாளன்..!

நீ ஏகத்துவம் தந்த ஏகவன்...!

நீ படைத்தவன்..!

நீ அளப்பவன்...!

நீ நிலைத்தவன்...!

நீ மாறையும் மாநபிவழியும் தந்தவன்..!

நீ வணங்குவதற்கு உரியவன்..!

நீ புகழுவதற்கு உரித்தானவன்..!

நீ ஒருவன்தான் எங்கள் இறைவன்..!!!

06 August 2012

அழகிய முன் மாதிரி முஹம்மத் (ஸல்)



ஏக இறைவனின் தூதர் என்றார்..

ஆடு மேய்த்த தொழிலாளியாகவே வாழ்ந்தார்..

...
படைப்புகளை வணங்க இயலாதன்றார்...

படைத்தவனை வணங்கியும்..

வணங்கவும் சொன்னார்..

மனிதர்கள் கற்பனைக்க முடியாத..

வேதத்தை தந்தார்...

ஏக இறைவனின் வார்த்தை என்றார்...

வட்டி வாங்குவதும் கொடுப்பதும்..

சாட்சியாய் இருப்பதும் கூடாதன்றார்...

வட்டியில்லாத நிதியத்தை நிறுவினார்...

ஏற்றத்தாழ்வு கற்பிப்பது கூடாதன்றார்...

சகோதரத்துவ மார்க்கத்தை சமர்பித்தார்..

விதவை வாழ்க்கை கூடாதன்றார்...

விதவைகளை மணமுடித்து..

மறுவாழ்வு சமுதாயத்தை மலரச்செய்தார்....

மொழி வெறி கூடாதன்றார்...

பிறமொழிகளுக்காக அரபிமொழிக்கு...

எந்த சிறப்பும் இல்லை என்றார்...

ஏக இறையோனை ஏற்காத சமுதாயத்தை..

பார்த்து கவலை கொண்டார்..

பண்பட்டு வாழ்வதற்கு...

பண்பாளராய் விளங்கினார்...

அழகிய முன் மாதிரி முஹம்மத் (ஸல்)