அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

06 April 2011

சிந்திக்க மட்டும்....

எளிமையாய் பேசும்.
அரசியல்வாதிகளின்..
அலங்கார ஆடம்பர வருகை...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட..
மக்கள் பிரதி்நிதி....
தன் குடும்ப வளர்ச்சிக்கு பாடுபட்டார்....

கல்வி கண்கள் என்கிறார்கள்...
கல்லூரிகள் குருடர்களாய்...
வாழச் சொல்கிறது...

சந்தேகத்தை அணிந்தவன்...
சந்தோசத்தை இழந்தான்..

அன்பை பெறாத வரை..
அனைத்தையும் பெறமுடியாது...

மன்னிப்பதை மறந்து விடாதீர்கள்..
உங்கள் சுயநினைவில்..
சொருகிவிடுங்கள்...

மகிழ்ச்சி வெள்ளத்தில் நீச்சல் தெரியாத..
மனநோய்காரன் ...

குடித்தவனின் உளரலில்..
உண்மை மட்டுமே இருந்தது....

கற்பனையில் கூட பொய் கலக்காத..
கவிஞர்கள் கூட்டம்...

இழக்க வேண்டியது தீண்டாமையை..
பெறவேண்டியது சமத்துவத்தை..

விழுந்த மழை..
எழுந்த விதை...

தர்மம் செய்ய துடித்தேன்...
செல்வம் இல்லாத போது...

சேவை செய்ய துடித்தேன்..
பதவியில் இல்லாத போது...

வருமையை வாழ வைக்கும்..
ஆட்சியாளர்கள் இலவசம்..
வழங்குகிறார்கள்...

பெற்றெடுத்த குழந்தை..
குப்பை தொட்டி காப்பகத்தில்...

பிச்சை எடுத்து வாழ நம் நாடு..
நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது...

கடமை செய்ய கை நீட்டும்..
நம் நாட்டு -அதிகாரிகள்...

மனிதர்கள் இருக்குமிடம்..
நாய்கள் ஜாக்கிரதை....

ஆயுதம் ஏந்திய போராட்டம்..
அமைதிக்கு வழி வகுக்காது....

No comments:

Post a Comment