அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

29 December 2011

இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்...

ஓர் இறை தந்த மார்க்கம்....
ஆறறிவும் ஏற்கும்....

இறைமறை சான்றுகள்..
இறைத்தூதரின்...
பொண்மொழிகள்....

தீண்டாமை தீண்டாத மார்க்கம்...
மனிதர்கள் ஏற்கவேண்டிய  மார்க்கம்...

சகோதரத்துவம் சமத்துவம்..
ஓர் இறைவனை மட்டும்..
வணங்கும் மகத்துவம்...
மலர்ந்த சன்மார்க்கம்....

கடமை சொன்ன இறைத்தூதர்..
கடமையாகவே வாழ்ந்த...
வரலாறு தந்த மார்க்கம்...

சீர்கேட்டின் விளிம்பில் முழ்கும்..
மனிதர்களுக்கு சீர்திருத்தத்தை..
செம்மைபடுத்தும் சிறந்த மார்க்கம்...

அல்லாஹ்வின் ஆட்சியை..
அரசாலும் அதிகாரத்தை...
அற்புதமாய் அறிவிக்கும்..
அழகிய மார்க்கம்...

வணிகம்  செய்யும் முறை...
வணிகத்தில் கிடைக்கும்..
லாபவளர்ச்சியை நேர்மையை..
கொண்டு பெற்றிட சொன்ன..
படைத்தவனின் மார்க்கம்...

இஸ்லாம் ஏற்கவேண்டிய மார்க்கம்..
இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்..


05 December 2011

ஓர் இறைவா...! நீயும்- நானும்....

யா அல்லாஹ்..!
என் இறைவன் - நீ..
உன் -அடிமை - நான்..

படைத்தவன்- நீ..
உன்னால் படைக்கப்பட்டவன்- நான்..

புகழுக்குரியவன்- நீ..
புகழுரைப்பவன் - நான்...

கொடுப்பவன் - நீ..
பெறுபவன் - நான்..

எல்லாம்-அறிந்தவன் - நீ...
எல்லாம்-அறியாதவன் - நான்...

பலமானவன் - நீ..
பலஹீணமானவன் - நான்...

நிலையானவன் - நீ...
நிலையற்றவன் - நான்...

மறக்காதவன் - நீ...
மறப்பவன் - நான்..

மன்னிக்க கூடியவன் - நீ..
மன்னிப்பு கேக்க கூடியவன் - நான்...

தூய்மையானவன் - நீ...
தூய்மை பெறாதவன் - நான்..

இணை துணை இல்லாதவன் - நீ..
இணை துணையோடு வாழ்பவன் - நான்...

என் இறைவன் - நீ..
உன் -அடிமை - நான்....

27 November 2011

எந்த படுபாவி கண்டு புடிச்சான்....

அடி வெட்கத்தில் விளைஞ்சவளே...
வேதனைக்கு சமஞ்சவளே...

வரதட்சணை கொடுத்து...
மணவாழ்க்கை வாங்கணுமா..?..!
வேணாண்டி வேணாண்டி...

ஒன்னுமில்லாதா உங்கப்பன்...
ஊருகெல்லாம் நாட்டாம...

குத்த வைச்சி சோகம்...
கொண்டு வந்து நின்றவளே...

எந்த படுபாவி கண்டு புடிச்ச...
வரதட்சணை கொடூம..

நாத்து கூட- அடுத்த வயலுக்கு...
வாக்கப்பட்டு போகுது...

நான்  பெத்த மக முப்பத தாண்டி...
நிற்கராளே...

பெத்த வயறு பத்த..
எந்த படுபாவி கண்டு புடிச்ச..
வரதட்சணை கொடூம...

சக்காளத்தியா வாக்கப்பட...
ஊருக்கு ஒருத்தன்...
இல்லாமலா போவான்.....

21 November 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்..!

ஓர் இறைவனை மட்டும்..
வணங்கச்சொன்ன...
இறைத்தூதர்...

சிறுபடையாய் இருந்தும்..
படைத்தோனின் துணை கொண்டு..
பெரும்படைகளை..
வீழ்த்திய  சரித்திரம்...


வலிமை கொண்ட..
ஆட்சி அதிபதியாய் இருந்தும்..
எளிமையாய்  வாழ்ந்த சரித்திரம்..

மறப்போருக்கும்..
மறைப்போருக்கும்..
மறுப்போருக்கும்..
மறுமையை எச்சரிப்பவராய்...
இருந்தார்...

மன்னிப்பதாயினும்..
தண்டிப்பதாயினும்..
ஓர் இறைவன் விதித்த...
சட்டத்தையே பின்பற்றலானார்...

திருடுபவரின் கையை..
வெட்டுங்கள் என்றார்...

என் மகள் பாத்திமாவே திருடினாலும்..
கையை வெட்டுவேன் என்ற...
நீதி பற்றாலர்....

நிலுவை மோசடி..
பெரும் குற்றம் என்றார்...

சிலை வணங்கிய கூட்டத்தாரிடம்..
மனிதனுக்கேற்ற மார்க்கத்தை..
மனம் நிறைக்க செய்தார்...

இறுதி நபியாய்..
உறுதி நபியாய்..
உத்தம நபியாய்..
உலகில் உதித்த..
உயர்ந்தோனின் தூதராவார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்...

11 November 2011

அர்த்தமுள்ள கிறுக்கல்கள்....

எச்சரிக்கை செய்த..
ஓர் இறைவேதம்....

பயனற்று போன...
கடந்த காலங்கள்..

நன்மையும் தீமையும்...
நம் வாழ்க்கை பாதையின்...
சோதனைச்சாவடி....

மறுமை வாழ்க்கையில்..
நம்பிக்கை வைத்தவர்கள்...
அதற்காக வாழமறந்தார்கள்...

விளைகிற ஆசையில்...
நன்மைகள் எதுவுமில்லை...

நல்லோர்கள் பலசெயல்களை...
அனுபவிக்காமல் துறந்தே..
வாழ்ந்தார்கள்....

விதியில் மட்டும் சதி இல்லை...
அவன் விதித்ததே நடக்கும்..

இம்மை நிறைய்ய...
கற்று தந்திருக்கிறது...
வாழத்தான் முடியவில்லை...

ஆறறிவில் அறியமுடியவில்லை..
படைத்தவனின் அற்புத அதிசிய...
ஆச்சரியங்களை...

தெரிந்தோ தெரியாமலோ...
எண்ணங்களை மட்டும்...
அழகாய் வைத்திருப்போம்...

04 November 2011

( நீடூர்) நெய்வாசல் நாட்டாமை தேர்தல் கோரிக்கை..

 நீடூர்- நெய்வாசல் ஜமாத்தார்களுக்கு  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ்வின் நாட்டத்தால் நாட்டாமை தேர்ந்தெடுக்கும் புதிய தலைமை..
எப்படி தேர்ந்தெடுக்கவேண்டும் இதுவரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்..
இனி மேலும் குரல் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக..
நேர்மையாக ஜனநாயக முறைப்படி இருக்காது   ஆகவே...
ஓட்டெடுப்பு மூலமே  தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்திட வேண்டும்...
அப்போதுதான் தனிமனித உரிமையை நிலை நாட்டுவதாக இருக்கும்...
எந்த ஒரு  தனிமனித ஆதிக்கமும்  நமதூரில்இனிமேல் இருக்க கூடாது..
ஊர் கட்டுப்பாடு என்பது -அடுக்கு முறையில் இருக்க கூடாது..
அதிகார பகிர்வு மூலமே தீர்வு காணமுடியும் இதற்கு ஓட்டெடுப்பு தேர்வே...
அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒற்றுமை நிலைத்து தழைத்து விளங்கும்....
ஓட்டெடுப்பில் எந்த தில்லு முல்லும் நடைபெறாமல் நேர்மையாய் நடக்க..
அல்லாஹ்வை சாட்சியாய் வைத்து நடைபெறவேண்டும்...
யார் ? தெர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஒரு கோரிக்கை...
ஊர் வரவு செலவு  மதரஸா வரவு செலவு  வெளிபடையாக இருக்கவேண்டும்.
அதற்கு கணினியில் பதிவிட்டு இணையதளத்தில் வெளியிடவேண்டும்...
அப்போதுதான்  பதவி நம் மீது கரைபடிந்த பழியை சுமத்தாது..
பொதுவாழ்வில் தூய்மையானவர்களாக இருந்தால் பதவி சுமையா...
இருக்காது எனவே ஓட்டெடுப்பு மூலம்  தேர்ந்தெடுப்போம்..
அமைதியும் ஒற்றுமையும் நாமாக இருந்து அடுத்த ஊருக்கு..
எடுத்துகாட்டாக வரலாராய் இருப்போம்  இன்ஷா -அல்லாஹ்....!

                                                                                             வஸ்ஸலாம்..
                                                                    நீடூர் நெய்வாசல்  அ பாபு....


26 October 2011

யா அல்லாஹ்..! நீ படைத்து கொடுத்தழகு..!!

நீ..  படைத்த வானழகு..
பொழியும் மழையழகு..

விளையும் பூமியழகு..
வெளிச்சமிடும் நிலவழகு..

பகல் தரும் சூரியனழகு..
நீந்தி திரியும் நட்சத்திரங்களழகு..

உயிர் தரும் காற்றழகு..
ஓர் இறை கொள்கையழகு..

இஸ்லாம் மார்க்கமழகு..
மாமறையழகு..

மாநபி வழியழகு..
ஐந்து கடமையழகு..

ஐய்வேலை தொழுகையழகு...
தர்மம் அளத்தழகு..

நோன்பு நொற்றழகு..
ஹஜ் நிறைத்தழகு..

மஹர் கொடுத்து..
மணமுடிக்கச்சொன்ன பண்பழகு..

சகோதரத்துவத்தை..
சமர்பித்த  சான்றழகு..

விதவை கூடாதென்று..
மறுமணம் வலியுறுத்தியழகு...

29 August 2011

இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

----------------ஈத் முபாரக்---------------------

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
ஆரத்தழுவி கொண்டாடுவோம்....

அன்பில் விளிம்பில் நனைவோம்....
முகம் மலர்ந்த பூரிப்பில்..
கடமை நிறைத்த மகிழ்வில்...
கண்ணியம் காத்த சமுதாயமாய்..
கட்டுபாடு ஒற்றுமை காப்போம்...

ஆயிரம் மாதங்கள் வென்ற....
லைலத்துல் கத்ர்..
ஒர்யிரவு   சிறப்பு...

புத்தாடையில் புதிய மனிதனாய்..
நன்மைகளை வாழ்வில் சேர்ப்போம்..

அல்லாஹ்விற்குரிய நோன்பை..
பசித்திருந்தளித்தோம்..

முஹம்மத் நபிவழி கனவு..
நிஜத்தினில்  வாழ்ந்தோம்...

பசித்திருந்தோம்..
விழித்திருந்தோம்...
ஏழ்மையறிந்தோம்..
தர்மம் அளந்தோம்..
ஓர் இறைவனையே மகிழ்வித்தோம்..

கொண்டாடி மகிழ்வோம்...
என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
-----------ஈத் முபாரக்----------------....

24 August 2011

விரைந்தெழு தோழா விரைந்திடு தோழா..!

விரைந்தெழு  தோழா..!
விரைந்திடு தோழா.!

நாளைய உலகை இன்றே..
எதிர்கொள் தோழா..

உறுதியான உள்ளம் வைத்து..
உயர்வான பாதை அமைத்து..

உழைத்து வாழ புறப்படு தோழா..!
ஒன்று பட்டால் வருமை..
ஒழித்து விடலாம்..

தொன்று தொட்டு பகையை..
வென்றுவிடலாம்..

எழுச்சி எங்கும் ஏற்றிவைப்போம்..
தோழா பாரதி கண்ட புதிய பாரதம்..
விரிப்போம் தோழா..

நம் தேசம் சுத்தம் செய்வோம்..
நாளை நமதே இன்றே உழைப்போம்..

ஊழல் லஞ்சம் பஞ்சம் இல்லாத..
நாடாய் மாற்ற...

வருமையில்லாத நாடாய் செழிக்க..
உயர்ந்த நாடாய் உலகில் செழிக்க..

உறக்கம் கலைப்போம்..
உழைத்து வாழ்வோம்..
உயர்வை தொடுவோம்..

விரைந்தெழு தோழா..
விரைந்திடு   தோழா...

10 August 2011

சிந்திக்கவேண்டிய சமுதாயம்..

எங்கே ? போகிறது..
நம் சமூகம்..
எங்கே ? போகிறது..

தர்கா வழிபாடு..
இன்னும் நடக்கிறது..

மனித புகழ்பாடு..
இன்னும் நடக்கிறது..

இணைவைக்கும் செயல்பாடு..
இஸ்லாத்தில் இருந்தும்..
தொடர்கிறது..

இரவும் விழிக்கிறது..
நம் சமூகம் விழிக்க..
மறுக்கிறது...

தடுக்கப்பட்ட வட்டியை..
வாங்கியும் கொடுத்தும்..
வாழ்கிறது..

இனிக்கும் இஸ்லாம்..
கசக்கும் சமூகமாய்..
இருக்கிறது..

தடுக்கவேண்டும்..
தவிர்க்கவேண்டும்..
விழிப்புணர்வு..
விளையவேண்டும்...

அறியாமை களையவேண்டும்..
அறிந்த சமூகமாய்..
நம் சமூகம் மலரவேண்டும்...

மார்க்க கல்வியும் உலக கல்வியும்..
வாழ்க்கையாக்கி கொள்ளவேண்டும்..

மறுமை வெற்றி..
 நமதாக்கி கொள்ளவேண்டும்...

24 July 2011

சிறப்புமிக்க ரமதான் மாதம்...

அல்லாஹ்வின்  நற்பெயரால்..!

சிறப்புமிக்க ரமதான் மாதம்..
இறைமறையை இறைத்தூதருக்கு...
அருளிய மாதம்...

நரகவாசல் - அடைத்து..
நன்மை பெய்க்கும் மாதம்..

நல்வழியாம் நபிவழிபேண..
நல்லதொருமாதம்...

பசிவுணர்ந்து தர்மம்...
அளித்திட வகைசெய்யும் மாதம்...

அல்லாஹ்வின் அறிவிப்பாளர்களான..
வானவர்கள் வருகைதரும் மாதம்...

ஏழைகள்  இல்லாத சமுதாயம்..
ஏக்கங்கள் இல்லாத உள்ளத்தையும்..
உருவாக்கும் மாதம்...

அல்லாஹ்..! விதித்த  கடமையை...
 நிறைக்கும்  மாதம்..

மனிதனில் உயர்ந்தவன் இல்லை..
தாழ்ந்தவன் இல்லை..
சமநிலையை  விரிவாக்கும் மாதம்...

தீமையை தடுத்து..
நன்மையை ஏவும் மாதம்...

இம்மையும் மறுமையும்..
நினைவு கூறும்  மாதம்...

மறுமைவெற்றிக்கு..
பாலமாய் இருக்கும் மாதம்...

படைத்தவனை  -அளந்தவனை..
அறிந்தவனை  ஆள்பவனை..
நிலைத்தவனை  மகிழபோற்றும்...
சிறப்புமிக்க ரமதான்  மாதம்...

12 June 2011

புறப்படு தோழா புறப்படு...

புறப்படு புறப்படு..
புயலாய் புறப்படு

புதியதோர் உலகம்..
உனக்குள் இருக்கு..

களையடு களையடு..
கயவர்களை களையடு..

காலம் என்ற வெகுமதியை..
கடந்து செல்ல துணிந்து வெல்ல..
வெற்றி அணிந்து வாழ...

குரல் கொடு..
வெற்றி வரம் பெறு..
உலகம் உன்னை பார்க்க..
உழைப்பில் நீயும் வாழ்ந்திடு..

விளையிற பூமி நமக்காக..
உழைத்து பெறுவோம் சமமாக...

உழைத்து பெறுவோம்..
உயர்வை அடைய்வோம்..

சத்திய பாதையில்..
இருக்கும் சோதனை..

வென்று வாழ்ந்தால்..
உண்டு சொர்க்கம்...

சொல் விதைத்தால்..
பொருள் விளையும்..

பகுத்தறிந்தால்..
சிறக்கும் வாழ்க்கை...

விழித்து வாழத்தான்..
விடியல்..

விழிப்புணர்வோடு..
வாழத்தான் மார்க்கம்..

புதியதோர் உலகம்..
உனக்குள் இருக்கு..
புறப்படு தோழா புறப்படு...


22 May 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-12.



படைத்தவனை மட்டும்..
வணங்கச்சொன்ன பண்பு..

ஒழுக்கத்தின் திறவுகோளாய்..
இருக்கும் மரபு...

ஒப்பற்றவனுக்கே அனைத்து புகழும்..
என்று சொன்ன  அழகு....

நான் ஓர் இறைவனின் தூதறென்று..
கர்வம் கொள்ளாத வரலாறு...

வட்டியில் இயங்கும் இயக்கும்..
மனித உலகத்தில் வட்டி கூடவே..
கூடாதன்று சொன்ன சிறந்த பொருளாதாரம்...

சோதனை வாழ்க்கை வென்று..
சொர்க்கம் சென்று குதூகலமாய்..
நிரந்திரவாழ்க்கை தொடங்கு..
என்ற உண்மை நிறை...

ஏக இறைவனிடம் மீளுதல் இருக்கிறதென்று..
ஓர் இறைவனை வணங்குதலும்..
தர்மம் அளித்தலும் நோன்பு வைத்தலும்..
ஹஜ் செய்தலும் மறுமை வெற்றிக்காண..
பாதை திறந்த செல்வம்...

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும்..
சிறந்த தூதர்களை அனுப்பினோம்..
அகிலத்தார்களின் அதிபதி..
சொன்ன நற்செய்தியை...
அன்புள்ளம் கொண்டோர்களிடம்..
பதிவுசெய்த பங்களிப்பு...

வாழும் சமுதாயதினருக்கு வழி காட்டி..
வல்ல இறைவனின் மார்க்கத்தை..
மனதில் கொடுத்து சென்ற அன்பளிப்பு....

எந்த தருணத்திலும் நீதியை..
செலுத்த சொன்ன நெறி...

தீமைகளை புறக்கணித்து..
நல்லவைகளை அற்பணிக்கச்சொன்ன..
பகுத்தறிவு விடியல்...

சமத்துவத்தை சகோதரத்துவத்தை..
அல்லாஹ்வின் அரசாலும் மகத்துவத்தை..
அமைதியில் தழைக்கச்செய்த..
அழகிய முன் மாதிரி முஹம்மத்....

14 May 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-11.

வாழ்வளித்த வல்லரஹ்மான்..
ஒருவனையே வணங்கச்சொன்ன தூதர்..

மறுமை வெற்றிக்காண பாதையை..
திறந்தளித்த தூதர்...

ஏக இறைவன் ஏற்று போதிக்கச்சொன்ன..
ஏகத்துவத்தை ஏற்றளித்த தூதர்..

இறைமறையின் இலக்கியத்தை..
இலக்கணத்தை இனிக்க சுவைக்க..
வாழ்விருந்தளித்த தூதர்..

இன இழிவு தரும் கோத்திரங்களை..
இனங்கண்டு அழிக்கும் சகோதரத்துவத்தை..
வலியுறுத்திய தூதர்....

மனிதர்களுக்கு மனிதர்கள்..
மண்டியிட்டு கிடப்பதை..
மனயேற்கலாகாது கூடாது...
என்றதூதர்..

பகுத்தறிவு பாசறையாய்..
பண்பட்ட பயன்பட்ட..
ஆறறிவு அறிவுச்சுவையாய்..
அகத்தினுல் அலங்கரித்தார்...

எல்லாம் படைத்தருளிய..
ஏக இறைவனையே வணங்குமாறு..
உளம் நிறைக்க ஏவினார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்....

06 April 2011

சிந்திக்க மட்டும்....

எளிமையாய் பேசும்.
அரசியல்வாதிகளின்..
அலங்கார ஆடம்பர வருகை...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட..
மக்கள் பிரதி்நிதி....
தன் குடும்ப வளர்ச்சிக்கு பாடுபட்டார்....

கல்வி கண்கள் என்கிறார்கள்...
கல்லூரிகள் குருடர்களாய்...
வாழச் சொல்கிறது...

சந்தேகத்தை அணிந்தவன்...
சந்தோசத்தை இழந்தான்..

அன்பை பெறாத வரை..
அனைத்தையும் பெறமுடியாது...

மன்னிப்பதை மறந்து விடாதீர்கள்..
உங்கள் சுயநினைவில்..
சொருகிவிடுங்கள்...

மகிழ்ச்சி வெள்ளத்தில் நீச்சல் தெரியாத..
மனநோய்காரன் ...

குடித்தவனின் உளரலில்..
உண்மை மட்டுமே இருந்தது....

கற்பனையில் கூட பொய் கலக்காத..
கவிஞர்கள் கூட்டம்...

இழக்க வேண்டியது தீண்டாமையை..
பெறவேண்டியது சமத்துவத்தை..

விழுந்த மழை..
எழுந்த விதை...

தர்மம் செய்ய துடித்தேன்...
செல்வம் இல்லாத போது...

சேவை செய்ய துடித்தேன்..
பதவியில் இல்லாத போது...

வருமையை வாழ வைக்கும்..
ஆட்சியாளர்கள் இலவசம்..
வழங்குகிறார்கள்...

பெற்றெடுத்த குழந்தை..
குப்பை தொட்டி காப்பகத்தில்...

பிச்சை எடுத்து வாழ நம் நாடு..
நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது...

கடமை செய்ய கை நீட்டும்..
நம் நாட்டு -அதிகாரிகள்...

மனிதர்கள் இருக்குமிடம்..
நாய்கள் ஜாக்கிரதை....

ஆயுதம் ஏந்திய போராட்டம்..
அமைதிக்கு வழி வகுக்காது....

03 April 2011

எந்தாயி நீ் என்ன செய்வ..

 அடி பெத்தவள..
பெயர் தாங்கியா வளர்த்தவள..
மார்க்கம் தெரியாம வளர்த்தாயடி...

அல்லாஹ்தான் இறைவன் என்று தெரியும்..
ஐய்வேல தொழுகைக்கு போகம..
நான் தொலைச்ச காலத்த யாரடி கொடுப்பா...

நபிவழி நடக்காம நண்பர்களோட..
நான் கழிச்ச நேரத்த நான் எப்படி சொல்ல..

இணையில்லா இறைவனுகிட்ட கேக்காம...
தர்காவுக்கு கூட்டிக்கிட்டு போய்யி...
பாவாகிட்ட கையேந்தி கேக்க வைச்சி...
அல்லாஹ்வுடைய கோபத்துக்கு..
ஆளாக்க வைச்சயடி....

சந்தன கூடுக்கு கூட்டிக்கிட்டு போய்யி..
தேர்யிழுக்க வைச்சயடி..

தொழுகைக்கு என்ன ஓதனுன்னு..
தெரியாம செய்கை தொழுகை..
தொழுது வந்தேன்னடி....

ஐந்து கடமை தெரியாம...
மா நபி வழி நடக்காம..
நேர்வழி தெரியாம..
எல்லா வழியிலும் நடந்தேன்னடி....

மறுமை வாழ்க்கை உண்டுன்னு சொல்றாங்க..
சொர்க்க வாழ்க்கை உண்டுன்னு சொல்றாங்க..
நரகவாழ்க்கையும் உண்டுன்னு சொல்றாங்க..
நம் பாவம் மன்னிக்க படைச்சவனயே கேப்போமடி..

உந்தாயி சொல்லி கொடுக்காம..
எந்தாயி நீ என்ன செய்வ...

30 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-10.

இறைவனின் தூதர்..
உலக மனிதகுலத்திற்கு..
நியமிக்கப்பட்ட இறுதி தூதர்..
மனிதயினத்தின் போதகர்..

ஒன்றே குலம் ஒருவனே இறைவன்..
என்று ஒரே மார்க்கத்தை சொல்லி..
மகிழ்ச்சியில் ஆழ்தினார்...

மதங்கள் இல்லை..
ஜாதிகள் இல்லை..
நிறவெறி இல்லை..
மொழிவெறி இல்லை...
என்று ஒரே தாய் தந்தையரின்..
வழி தோன்றலே என்று..
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று..
பிரித்து பார்ப்பதை ஒழித்தார்...

நேர்வழியை நிலை நாட்டினார்..
 நன்மை செய்ய ஏவினார்..

அறிந்தவரும் அறியாதவரும்..
சமமாக மாட்டார்கள் என்று..
தெரிந்து தெளிந்து வாழ..
அறியாமை திரையை விலக்கியவர்...

இஸ்லாம் படைத்தவனின் மார்க்கம்..
அறிந்தோருக்கு நேர் வழி இருக்கிறது..
என்று படைத்தவன்  மீது சத்தியமிட்டு..
சாட்சியளித்தார்...

போர் செய்ய ஆணையிட்டு...
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து..
கொண்டுயிருக்கிற தலைவரல்ல..

போர் களத்தில்..
தலைமை தாங்கிய தலைவர்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..


26 March 2011

முதிர் கன்னியின் குமுறல்கள்...

பெண் கேக்க வந்தவுக...
பொண் கேட்டாக..
பொருள் கேட்டாக..

மணக்க  வந்தவுக..
பெண்ன கேட்பாகளா..
பொண்ன  கேட்பாகளா..

 உழைக்கிறவுக...
உள்ளத்த கேட்பாக..
உறவ கேட்பாக...
சொகத்த கேட்பாக...
சொத்தையா ? கேட்பாக...

மலர் என்றாக..
மணம் என்றாக..
மதி என்றாக.. 
பெண்மை என்றாக..
மென்மை என்றாக..
மணக்கத்தான்..
வரம் கேட்டாக..

வாழ்க்கை பூக்காமலே..
வாழா வெட்டியாய்..
சமூக வழக்கத்த..
வாழையாடி வாழையாய்..
வாழ வைக்கிறாக...

கழுதைக்கு  வாக்கப்பட்டாலும்..
இன்பம் இல்ல..
இழப்பும் இல்ல....

18 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-9.

அன்போடும் ஆதரவோடும்..
அரவணைத்தார்..

உயர் குலமென்று தங்களைத் தாங்களே..
கருதிய குரைஷியர்கள் இழித்தார்கள்..
பழித்தார்கள் கேலிசெய்தார்கள்..
கேள்விமேல் கேள்வி கேட்டார்கள்..

அமைதி காத்த அண்ணலார்..
இஸ்லாத்தை குரைஷியர்களின்..
உள்ளத்தில் சேர்ப்பதில்..
கவனம்கொண்டார்....

இடி முழக்கத்தை..
மின்னல் வெளிச்சத்தை..
மழை வெள்ளத்தை..
நிலநடுக்க பூகம்பத்தை..
பெரும் புயலை பெரும் கடலில்..
ஏற்படும் அழிவை..
அச்சத்தோடு அறிவித்தார்...

காலம் விரையமாக்குபவர்களில்..
ஒருவராக நீங்கள் இருந்து விடவேண்டாம்..
என்று எச்சரித்து கொண்டே இருந்தார்..

வண்ணம் தீட்டுவதில் ஏக இறைவனே...
வல்லவன் என்றார்..

வல்லவனின் வலிமையைச் சொல்லி..
வரலாறாய் வாழ்ந்தார்..

கல்லறையின் கொடுமையை சொல்லி..
கண்ணீர் வடித்தார்...

நரகத்தின் கொடுமையை சொன்ன..
இறைவனிடம் இறைஞ்சினார்..

அறுபத்து மூன்று ஆண்டுகால வாழ்வில்..
உலகம் படைக்கப்பட்டது முதல்..
உலகம் அழி்க்கப்படும் வரை..
இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளையும்..
நினைவில் நிலைக்க செய்த..
சிறப்பான தூதர்..

மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் நல்வழியாய்..
தன் வாழ்வியலை வகுத்தார்...
அழகிய முன் மாதிரி முஹம்மத்...




14 March 2011

யா-அல்லாஹ்....!


யா-அல்லாஹ்..!
எங்கள் மீது கருணை..
உன் நிழலில் நாங்கள்..

யா-அல்லாஹ்..!
நிரந்திரமானவன் நீ..!
எங்கள் பாவங்கள் மன்னிக்க..
போதுமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
மறையருளி மாநபி..
வழி வகுத்தவன் நீ..!
புகழுக்கு உரிமையாளன் நீ..!

யா-அல்லாஹ்..!
ஒளிமையமானவன் நீ..!
இணையற்ற தனித்துவமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
படைப்பதும் -அழிப்பதும்..
உயிர் எழுப்புவதும்..
உனக்கு எளிதே..!

யா-அல்லாஹ்..!
உரக்கச்சொல்வோம்..
 நீ-ஒருவனே இறைவன் என்று..

யா-அல்லாஹ்...!
நன்றி மறந்த கூட்டத்தார்களில்
ஒருவராக எங்களை ஆக்கிவிடாதே..
ஏந்தல் நபி போதித்த..
ஏகத்துவ வழியில் தடம்புரழாமல்...
வாழ உன் துணை வேண்டும்..









08 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-8



எந்த தற்பெருமையும்..
ஏற்காத ஏந்தலானார்..

உயரிய புகழை உரியவனுக்கே..
உயர்ந்தவனுக்கே உரித்தாகுக..
என்று உரைத்தலானார்..

ஏக இறையோனின் ஆணைகளை..
மொளனத்தில் கவணத்தில்..
தன்னுல் பதியவைத்தார்...

வாழ்ந்ததில் சிறப்பு..
வாழ்வதில் சிறப்பு...
வாழ்வதற்கு சிறப்பாய்..
வழிகாட்டினார்...

மனிதகுலத்திற்கு இறுதி தூதர்..
இணைவைக்காமல் வாழச்சொன்ன..
இனிய போதகர்..

வல்லோனின் பிரியமான..
வானவர்களிடம் உரையாடிய..
அழகிய நேசகர்....

விஞ்ஞானம் விதையாக..
இருக்காத காலத்தில்..
வானத்தில் உள்ளதை பற்றி..
பூமியில் உள்ளதை பற்றி..
படைப்பை பற்றி..
படைப்புகளின் வளர்ச்சிகளை பற்றி..
மரணத்தை பற்றி மறுமையை பற்றி..
தீர்ப்பு நாளை பற்றி..
சொர்க்கத்தை பற்றி..
நரகத்தை பற்றி..
முன் அறிவிப்பு செய்தார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்....

05 March 2011

அன்புள்ள ஆட்சியாளர்களுக்கு....



ஒடுக்கப்பட்டோம்..
உரிமை பறிகப்பட்டோம்..

பாலைவனத்தில்..
பரிதவிக்கப்பட்டோம்..

இயந்திரமாய் இருந்துவிட்டோம்..
இனியும் வரும் தலைமுறையை..
விடமாட்டோம்...

ஒரணி திட்டம் தொடங்கிவிட்டோம்..
அறியாமை வாசலை..
அடைத்துவிட்டோம்...

நிலையானவனின் நீதியானவனின்..
அடிமைதான் நாங்கள்..

யாருக்கும் எவருக்கும்...
அடிபணியமாட்டோம்..

அநீதி தழைக்க இனியும்..
பொருக்கமாட்டோம்..

குரல் கொடுக்கவும்..
போராட்டம்தொடுக்கவும்..
உயிர் துறக்கவும் துணிந்துவிட்டோம்...

சம உரிமை கிடைக்கும் வரை...
சம வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை...

போதும் சிறுபான்மை என்று..
சிறுமை படுத்தியது..

இந்தியாவின் இரண்டாவது..
பெரும்பான்மை மக்கள்தான் நாங்கள்..

இடஒதுக்கீடு எங்கள் வருங்கால..
தலைமுறைகளின் கனவு..

ஆட்சியாளர்கள் இன்றே இப்பவே..
சடடமாக்கவேண்டும்..

வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ..
அதிகார பகீர்வுவேண்டும்...

02 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-7

அறியாமை காலத்தில்..
அறிவுடையோர் சிலர்..
அதிசியக்க ஆச்சரியக்க..
இலக்கணத்தோடு..
இலக்கியத்தோடு வாசித்து..
வியக்க வைத்தார்..

அரசாங்க மாளிகை பாலைவன...
குடிசையாய் இருந்தது..

அரசாங்க இருப்பில் உள்ளது..
ஏழைகளுக்கே உரியது என்று..
கொடுக்கும் முறையை..
திட்டமிட்டு வரைமுறைபடுத்தினார்...

மாற்று ஆடைஒன்று மட்டுமே..
வைத்திருந்த மாபெரும்...
தலைவர் ஆவார்....

தன்னை தூற்றுவோரை..
ஓர் இறையை போற்றுவோராய்..
 மாற்றினார்..

இணையில்லா ஏக இறையோனை..
ஏற்காமல் ஏற்றும் வணங்காமல்..
மரணித்து விடாதீர்கள் என்று..
அச்சத்தோடு எச்சரித்தார்...

ஆடு மேய்க்கும் கூட்டத்தார்களிடம்..
இஸ்லாம் மார்க்கம் போதித்த மாண்பு..

ஒப்பில்லா ஓர் இறை புகழ் ஓங்க..
ஓரணி தொடங்கினார்...

உலகத்தலைவர்..
சுவனத்தின் தலைமகன்...

பெண்களை அடிமை படுத்தி..
கேவலபடுத்தி ஆபாசபடுத்தி..
வந்த காலத்தில்..
பெண்மையின் தன்மையும்..
தாய்மையின் சிறப்பையும்..
சிந்திக்க சிறப்பித்தார்..

உள்ளத்தால் பிராத்தனை செய்ய..
உயர்ந்தவனை நினைவுகூர்ந்தார்...
அழகிய முன் மாதிரி முஹம்மத்...!!!

28 February 2011

அன்புள்ள சகோதரர்களுக்கு...!!!

அல்லாஹ் ஒருவனையே வணங்கிடுக..
மாநபி வழியில் நாளும் நடந்திடுக..

மாமறையை வாழ்வில் அணிந்திடுக..
ஐந்து கடமையை நிறைத்திடுக..

கற்ற கல்வியை கற்பித்திடுக..
வாழும் வாழ்க்கையை..
விளங்க விளக்கிடுக..

மனம் மகிழ்ந்து தர்மம் தந்திடுக..
செல்வம் இருப்பதில் தர்மம்..
அளப்பதில் முதன்மையாய் இருந்திடுக..

அறியாமையை இல்லாமையாய் ஆக்கிடுக..
ஒற்றுமையாய் ஒரணியில் திரண்டிடுக..

திகட்டாத இஸ்லாத்தில்..
முழுமையாய் நுழைந்திடுக...

கல்வி தோட்டத்தில்..
அறிவு கனியாய் இருந்திடுக..

அறபோராட்டத்தில் உங்கள் குரலும் ஒலிக்க..
அழைப்பை ஏற்று வந்திடுக..

இடஒதுக்கீடு கிடைக்காது நடக்காது..
முடியாது இயலாது என்ற..
விரக்தியை வீசி எறிந்திடுக....

நாளைய தலைமுறைக்கு இன்றே..
நல்வழி திறந்திடுக...

நற்பணிகள் நாளும் செய்திடுக...
நலமும் வலமும் பெற்று..
வாழ்ந்திடுக.....

24 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-6

கற்பனைக்க தெரியாத தூதர்..
மூடிமறைக்க தெரியாத தூதர்..
முழுமையான நிறைவான..
மகிழ்வான தீன்வழி திறந்தார்..


இறையளித்த மறைவசனங்களை..
இறையட்சத்தோடு எடுத்துரைத்தார்..

சீர்கெட்டு இருந்த சமுதாயத்தை..
சீரான மார்க்கம் கொண்டு..
சீர்படுத்தினார்..

இணைவைக்காமல் வாழ..
இனிய இஸ்லாம் மொழிந்தார்..

இறைதன்மையின் ஆற்றலையும்..
மனிததன்மையின் பலஹீணத்தையும்..
மறக்காத மறைக்காத மறுக்க முடியாத..
ஆதாரங்களை -அடுக்கிவைத்தார்..

ஏகத்துவத்தை ஏற்று..
ஏவினார்..

சொல்லாற்றலும் செயலாற்றலும்..
செம்மையாய் செய்தார்..

மனைவிமார்களின் வாழ்க்கையில்..
மனம் கோணாமல் நடந்து கொண்டார்..

உம்மி நபியாய் உத்தம நபியாய்..
உலகில் விளங்கினார்...

நீதியின் பக்கம் நிற்போராய்..
அநீதியை தடுப்பவராய்..
பகை மறபவராய்..
நல் உடையோராய்..
வெல் படையோராய்..
வாழ்ந்து காட்டினார்..

ஆளும் ஆட்சியாளனை..
அர்ஷின் அதிபதியை..
இறுதி நாளின் நீதியரசனை..
படைத்தவனை -அறிந்தவனை..
அளப்பவனை அழிப்பவனை..
மீண்டும் உயிர் எழுப்புபவனை..
வணங்கி வாழ்ந்து வாழச்சொன்ன..
அழகிய முன் மாதிரி முஹம்மத்...



21 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-5

ஏக இறைவனின் மறையை ஏற்று..
போதிக்கும் பெரும் பாக்கியம் பெற்றார்..

மனிதர்களில் மாணிக்கம்..
மனித நேய மனம்..
மனித நேய குணம்..
மனிதனுக்கேற்ற மார்க்கத்தை..
மரபுகளோடு விரித்தார்..

மனித குலத் தந்தை..
ஆதம் ஹவ்வாவின் வாரிசுகளான..
நாம் எல்லோரும் சகோதர சகோதரிகளே..!
என்று நன்மாராயம் நவின்றார்..

ஆரத்தழுவும் கூட்டத்தாரை..
உருவாக்கினார்...

மறுமையில் சொர்க்கத்தின் மகத்துவத்தை..
நரகத்தின் கொடுமையை நேர்வழியில்..
நீதி நெறிவழியில் மனித உள்ளத்தில்..
பதிய வைத்தார்..

ஓர் இறைவனுக்கு..
சிறப்பான தூதராய்..
சிறம் பனிந்தார்..

விண்ணுலக பயணத்தின் காட்சியை.
சாட்சியாய் விபரமாய் விவரித்தார்..

துறவி வாழ்க்கை கூடாதன்று..
மனிததேவையை மனம் ஏற்கும்..
வகையில் மனம் திறந்து..
சொல்லலானார்..

ஏக இறையோனின் மாண்புகளை..
மனிதர்களின் பண்புகளை...
பிரித்து தெரிந்து தெளிந்து-அறிவித்தார்..

சொல்லும் செயலும் பதியவைக்கும்..
ஏக இறைவனை வணங்குமாறு..
அழைப்புவிடுத்தார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..


17 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-4

ஓர் இறைவனுக்கு..
இணைவைக்காமல் வாழ..
இயன்றளவு சொல்லளவு..
செயல்லளவு முடியும் வரை..
முறைபடுத்தினார்...

முன்னோர்கள் வாழ்ந்த..
அறியாமையை பட்டியலிட்டார்..

பொழியும் மேகம்..
உலவும் காற்று..
விளையும் பூமி..
வாழும் உயிரினங்கள்..
அத்தாட்சிகளாக ஆதரத்தோடு
அடையாள படுத்தினார்...

கண்ணுக்கு கண் கைக்கு கை..
காலுக்கு கால் உயிருக்கு உயிர்..
என்று கட்டளை சட்டம் பிறபித்து..
குற்றம்புரிய தூண்டும் எண்ணத்தை.
அடியோடு களையடுத்தார்...

ஓர் இறைவனுக்கு..
 நாம் எல்லோரும் -அடிமையே..
என்று-அகபாவம் ஆணவம்..
கர்வம் தலைகணம் ஆதிக்கமாய்..
இருந்த மனித உள்ளத்தில்..
இருந்து தகத்தெறிந்தார்...

அடுத்தவர் பொருளை அபகரிக்க..
அனுபவிக்க அனுமதி மறுத்தார்..

ஓர் இறைவன்..
சொன்னதையும் தடுத்ததையும்..
கண்டித்ததையும் கூட்டாமல்..
குறைக்காமல் பகுத்தறிவோடு..
பகர்ந்தார்....
அழகிய முன் மாதிரி முஹம்மத்...

16 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-3

சாந்தியும் சமாதானமும்..
முகமன்னாக சொல்விதித்தார்..

எழுத படிக்க தெரியாத..
எம்பெருமானார்..
எளிமையில் என்னற்ற..
செய்திகளை எத்திவைத்தார்..
எடுத்துவைத்தார்..

வட்டி வாங்க கூடாது..
வட்டி கொடுக்க கூடாது..
இருவருக்கும் சாட்சியாய்..
இருக்க கூடாது என்று..
சமுதாய நலனில்..
பெரும் மாற்றத்தை..
தோற்றுவித்தார்..

விதவை வாழ்க்கை கூடாது..
என்று மறுமண வாழ்க்கைச்..
சட்டத்தை மலரச்செய்தார்..

போதை தரும் வஸ்துக்களை..
அருந்த தயாரிக்க விற்க வாங்க..
தடை செய்தார்...

 நிலுவையில் குறைப்பு கலப்பு..
செய்வதை தடுத்தார்...

ஏற்றத்தாழ்வு மிகுந்த..
சமுதாயத்தில் பிறந்து..
சமச்சீர் சமுதாயமாக..
சமநிலை படுத்தினார்..

ஒழுக்கத்தை ஒவ்வொரு முறையும்..
ஒப்பித்து கொண்டே இருந்தார்..

நேர்மையை கடபிடித்து..
கடபிடிக்கவும் சொன்னார்..

மரணத்தை மறுமையும்..
நினைத்தவாறே வாழச்சொன்னார்
அழகிய முன் மாதிரி முஹம்மத்..

14 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-2

ஒப்பற்ற இறைவனை..
ஒப்பற்ற மார்க்கத்தை..
பகுதறிவோடு இவ்வுலகில்..
தழைக்கச்செய்தார்...

சட்டம் இயற்றுவதிலும்..
சட்டம் பின்பற்றுவதிலும்..
மாமனிதராய் விளங்கினார்..

கல்லடியும் சொல்லயும் ஏற்று..
பொருமைக்குவுறியவரானார்..

பாவம் செய்தாவாறு..
மக்களை ஏவினார்..

ஓர் இறையை வணங்குவதில்..
ஆர்வலர் ஆனார்..

சொர்க்கம் கண்டும்..
நரகம் கண்டும்..
மக்கள் இடையே..
விழிப்புணர்வுவூட்டினார்..

உண்மையும் பொய்யும் பிரித்து..
சத்தியத்தை போதித்தார்..

அடுக்கடுக்கான..
ஆதாரங்களை கொண்டு..
அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்..

இறைவசனங்களை...
இலகுவாக வாசித்தார்..

ஓர் இறை படைப்புகளை...
ஆதாரங்களோடு விளக்கினார்..

பொருமை அணிந்த பெருமானார்..
பெரும் புகழை..
ஓர் இறைவனுக்கே சேர்த்தார்..

இப்படி ஒரு மார்க்கம்..
இப்படி ஒரு தலைவர்..
உலகம் வியக்கும் வண்ணம்..
வாழ்ந்தார் வாழவும் சொன்னார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..

12 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-1

ஓர் இறைவனின்..
இறுதி இறைத்தூதர்..
இஸ்லாத்தை இவ்வுலகில்..
போதித்தார்..

ஐந்து கடமையின்..
கண்ணாய் கனியானார்..

இறைவணக்கத்தில்..
நேரம் தவறாது நிறைத்தார்..

செல்வம் இருப்பதில்..
தர்மம் அளப்பதில்..
அறிவுபூர்வமான மார்க்கத்தை..
அறிமுகபடுத்தினார்..

ஏழ்மை -அறிய..
பசி உணர..
நோன்பின் நோக்கத்தை..
நுட்பத்தை நூதனமாய்..
அறிமுகபடுத்தினார்...

இறை இல்லம் தேடி..
இறை நம்பிக்கையாளர்கள் கூடி..
நிறம் பாராது மொழிபாராது..
சகோதரதுவத்தை..
சமர்ப்பித்தார்...

உரையாற்றுவதில்..
கம்பீர கலையானர்..

போர் தொடுப்பதில்..
வெற்றி வீரரானார்..

மாற்று இனத்தாரிடம்..
பண்பாளராய் விளங்கினார்..

நீதி செலுத்துவதில்..
வாய்மையாகவே..
வாழ்ந்தார்..

அதிபதியாய் இருந்தும்..
அடக்கத்தில் ஆட்சிசெய்தார்..

11 February 2011

முயற்ச்சிப்போம் முடியும் !வரை....

பெற்றோரும் கற்றோரும்..
அறிந்தவரல்ல.....
படைத்தவனின் ரகசியங்களை...

முஹம்மத் நபிவழி வாழ்க்கை..
சொர்க்கத்தில் நாம்...

கண்ணீரில் கழுவிய பாவங்கள்..
மீண்டும் செய்யாமலிருக்க..

சூழ்நிலைகள்  மனித நேசத்தை..
போலியாக்கிவிடுகிறது...

புதுப்புது ஆசைகள் சொர்க்கவாழ்க்கை..
கேட்கிறது மார்க்கம் பேணாமல்..

நன்றி மறந்த மனிதர்கள்..
ஓர் இறைவனை ஏற்ப்பதிலிருந்து..

இறைச்சட்டம் பேணமுடியாத மனிதர்கள்..
மனிதச்சட்டத்தில் குற்றங்கள் குவிக்கிறார்கள்..

உண்மைக்கு நீதிதான் நிரந்திரமானது..
நீதிக்கு உண்மைதான் நிலையானது...

ஒன்று பட்ட சமுதாயம் ஒரணி குரல்..
நிறைவேறாத ஆசைகளாகவே இருந்தது...

தோற்றுபோனோம் மறுமை வாழ்க்கைக்கு..
நம்மை தயார்படுத்திக்கொள்ளாமல்...

மண்ணறையில் உதவுவோர் யார்?
மறுமையில் உதவுவோர் யார்?
மன்னிக்க கூடியவன் யார்?
தண்டிக்க கூடியவன் யார்?
அவன் ஒருவனே இறைவன்..

தவ்ஹீத் என்னும் தங்க விரிப்புத்தான்..
நம் வாழ்க்கை பாதை..
முயச்சிப்போம் முடியும்!வரை....


10 February 2011

அல்லாஹ்......!!!

பொருமைக்கும் பெருமைக்கும்..
புகழுக்கும் உரிய..
இணையில்லா இறையோனே..!!

உயர்வாய் மறைவாய்..
எனை காக்கும் இறையோனே..!!

எங்கள் சிந்தைக்கு எட்டாத..
ரகசியங்களை அற்புதங்களை..
அதிசியங்களை ஆச்சிரியங்களை..
வியக்க வைக்கும் ஏக இறையோன்..
வல்லோன் ரஹ்மானே..!!

கருணை கொண்ட கொடையாளனே..!!
நிலைத்தோனே நீதிமானே..!!

இம்மையிலும் மறுமையிலும்..
நிலையான ஆட்சியாளனே..!!

வானம் நீ அமைத்தது..!
பூமி நீ-படைத்தது..!
உடல் உயிர் நீ-தந்தது..!
செல்வம் நீ தந்தது..!
வருமை நீ தந்தது...!
மரணம் நீ தருவது..!

ஏக இறையோன் -அல்லாஹ்வே..!!!
உன் புகழ் பாடுவேன் உலகினிலே..!!
உன் புகழ் மட்டுமே பாடுவேன் உலகினிலே..!!!

09 February 2011

ஓய்யாத ஒப்பாரி...


வாக்கப்பட்டு போனவளே...
சோகம் கொண்டு வந்தவளே..

வரதட்சணை கேட்டாகளா..
வன் கொடுமை செய்தாகளா..
கொடுத்ததல்லாம் பத்தலயாமா....

குடிசை வீட்டு கோடிஸ்வரன்..
இருந்ததெல்லாம் கொடுத்தானம்மா..

வாயார வாழ்த்தினவுங்க எல்லாம்..
எங்கம்மா போனாங்க..

பெத்த மனம் பதருதடி..
தனியா வந்த உன்னை பார்த்து..

ஊர் வாய்யிம் ஒய்யாம..
உன் பேச்சு பேசுதடி..

நாட்டாம பஞ்சாயித்துன்னு..
நாம போய்யி நிக்கனுமடி..

வாழாம வந்துட்டான்னு..
வாய்கிழிய வசப்பாடுதடி..

மானம் கெட்டு மண்ணில் வாழ..
நம் மனசு பொருக்கலயடி..

செல்வம் கொடுத்து சேத்து வைச்சாலும்..
மனசு ஒத்து போகுமாடி..
இறக்கமில்லா மிருங்களோடு..
இனியும் வாழ...


07 February 2011

சிறந்த வரிகள்..

பிறர்க்காக வருந்த முற்படு..
அடுத்தவர் உள்ளம் உனக்காக உதவும்...

ஒப்பனையிலும் உதட்டுச்சாயதிலும்..
உலாவரும் போலிமுகப்பெண்கள்..

தோல்வி ஏமாற்றம் அவமானம்..
இயந்திரவாழ்க்கையில் தினமும்..
நான் அனுபவிப்பவை...

வாழ வந்த வீட்டில்..
அவள் விருந்தாளி...

இருட்டு வெளிச்சத்தில்..
நிலவழகு..

நிலத்தில் விளையும்..
கட்டிடங்கள்...

நகை அணிந்த நகை கடை பொம்மை..
வாங்க முடியாத மகிழ்ச்சியில் நான்....

எனக்குள் விளையும் ஆசைகள்..
அனுபவிக்க முடியாத..
அதிஷ்டசாலி நான்..

சாதனை என்பது கேட்டு பெருவது அல்ல..
உழைத்து உயரத்தை தொடுவது..

விவசாய நாடு நம் நாடு..
விளைகிறது விலைவாசிகள் மட்டும்..

மறக்க நினைக்கிறேன்..
வாழ்ந்த உலகத்தை...

கற்று கொண்ட பாடம்..
பெற்று கொண்ட அனுபவம்...

பூக்கள் பறிக்கும் கைகளிள் ஆயுதம்..
அமைதி தொலைத்த உலகம்...

 நல்லவைகளை கற்று கொள்வோம்..
கற்றவைகளை கற்ப்பிக்க செய்வோம்..

04 February 2011

அன்புள்ள சகோதரர்களுக்கு...!!!

படைத்த ஓர் இறைவன் அல்லாஹ்..!
நியமித்த   இறுதி  இறைத்தூதர் முஹம்மத் நபிக்கு..
கொடுத்த வேதம் அல்குர்ஆன்..

முஹம்மத் நபிக்கு ஒலியால் அருளப்பட்டது..
வழங்கப்பட்டது கொடுக்கப்பட்டது...

அறியாமை பாதை..
செல்வோர் கவணத்திற்க்கு..

அறிவோருக்கு ..
நேர் வழி இருக்கிறது...

தீண்டாமை இருக்காத..
இருக்க முடியாத மார்க்கம் இஸ்லாம்..

தர்மம் கொடுக்க(மாத்திரம்)சொல்லவில்லை..
அளக்கவும் சொல்கிறது...

ஐந்து கடமையின் பலன்களை..
அறிவுபூர்வமய் எடுத்துரைக்கிறது...

சிந்திப்போருக்கு சிறந்த மார்க்கம்..
இஸ்லாம் வாழ்வியல் மகத்துவம்..

விளக்கப்பட்டுவிட்டது..
முழுமையாக்கப்பட்டுவிட்டது...

மறைவாக இருந்தாலும்..
நிறைவாகத்தான் இருக்கிறது...

முஹம்மத் நபி இறைத்தூதரின்..
சமுதாய சீர்திருத்தம் சீரமைப்பு..
ஏற்க தக்க தத்துவம்..

அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்...
என்னை சார்ந்தவர் இல்லை...

வட்டி வாங்குபவர் வட்டி கொடுப்பவர்..
என்னை சார்ந்தவர் இல்லை..

 நீதி பேனாதவர் கடமை பேனாதவர்..
என்னை சார்ந்தவர் இல்லை..

மழை பொழிய்ய செய்து..
விளைய்ய செய்பவனை ஏற்காமல்..
ஏற்றும் வணங்காமல்..

பகுத்து தேர்ந்தெடுத்து சுயமாக..
ஏற்க சொல்கிற மார்க்கம் இஸ்லாம்..

நம் எல்லோர் மீதும் சாந்தியும்..
சமாதானமும் நிலவட்டுமாக...

29 January 2011

சிந்திக்க மட்டும்....

பார்க்காத சொர்க்கத்தின் மீது..
யாருகுத்தான் ஆசையில்லை..
நம்பிக்கை கொள்ளாதவருக்கும்..

சிந்திக்கின்ற நேரத்தைவிட..
சீரழிகின்ற நேரம் அதிகம்..

மார்க்கம் என்பது ஏற்று அணிவது மட்டுமல்ல..
கற்று கற்ப்பித்து வாழ்ந்து காட்டுவது..

நிலையான வாழ்க்கை இல்லை..
நிலையான இளமை இல்லை..
நிலையான செல்வம் இல்லை.
நிலையான ஆசைகள் மட்டும்..
மரணம் வரை....

சமுதாய புரட்சி நலன்...
சந்தர்ப்பவாதிகளாள்..
சாக்கடையானது...

நாகரீகமாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்..
ஆடை குறைப்பில் என் குலப்பெண்கள்..

பழம்பெரும் பண்பாடு பகுத்தறிவு ஏற்காத..
பாழடைந்த பண்பாடு...

மறுமை வெற்றி எல்லோரும் விருப்புகிறோம்..
வணங்காமல் தர்மம் அளக்காமல்..

இறக்க பிறந்த மனிதர்கள்..
படைத்த ஓர் இறைவனை..
மறந்து வாழ பழகினார்கள்....





22 January 2011

நம் குரல்....

ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரல்....
செவிடர்களாய் ஆட்சியாளர்கள்....

அனைத்து கட்சி கூட்டம்..
அப்பாவி மக்களின்..
அடுத்த கட்ட ஏமாற்றம்....

பொருப்பில்லாத மனிதர்களின்...
வெருப்பான செயல்கள்....

கையூட்டு வாங்காத அதிகாரி..
சக-அதிகாரிகளாள் சபிக்கப்பட்டார்...

விலைவாசி உயர்வு...
கனவில் வாங்கிய மளிகை சாமான்கள்....

கடமையை மறந்த மனிதர்கள்...
மறுமையை போதிக்கிறார்கள்...

இழக்க வேண்டியது தீண்டாமையை..,
பெறவேண்டியது சமத்துவத்தை....

நன்றிக்கு உதாரணம்...
நாய்கள் என்கிறார்கள்..

வாங்கிய சுதந்திரம் இரவில்...
சுரண்டும் கூட்டம் பகலில்...

ஒரு வீரனின் பேச்சி...
நடத்தையில் இல்லை....

மூடர்களுக்கு ஒரு பழக்கம்..
எல்லாவற்றையும் நம்பிவிடுவது..

பகுத்தறிவாதிகள்   என்று சொல்லி...
கொள்கிறவர்களுக்கு ஒரு பழக்கம்..
குதர்க்கமாகவே கேள்வி கேட்பபது...

ஏழைகளின் வருமை..
செல்வந்தர்களின் பெருமை....

நம் நாட்டில் நாம் வாழ...
நமக்கில்லாத உரிமை...

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம்...
ஓர் இறை கொள்கையில் தீர்வு...

21 January 2011

கற்பனையும் கருத்தும்....

ஊருக்கு போதித்தவர்..
உள்ளத்தால் உதவவில்லை...

அன்பை காட்டி கொண்டே இருங்கள்..
ஆரோக்கியத்தை பெற்று,,
கொண்டே இருப்பீர்கள்..

தர்மத்தை அளந்து கொடுங்கள்..
அன்பை அளக்காமல் கொடுங்கள்...

இரவு விழிக்கிறது உழைத்து,,
உயரவேண்டும் என்பதற்காக
லஞ்சம் வாங்கவும் ஊழல் செய்யவும்..
என்பதற்காக  அல்ல.....

திறக்காத நகை கடைபடி..
காத்திருக்கும் பெண்கள்...

பாலைவனத்தில் உழைத்து..
அனுப்பிய பணம்   நகை..
அழித்து அழித்து பன்னியவிரையும்..

குடிசைக்குள் மின்சார நிலா..
தேடுதலில் ஈடுபடும் பூனைகள்..

உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்..
மரணத்தில் சமமானான்....

அமைதியான முறையில் நடந்தது..
மதவாத கூட்டம்...

மக்கள் சக்தி இயக்கம்..
ஆட்டுமந்தைகளாய்..
மக்கள் இருக்கும் வரை..

தீண்டாமை திடலில்..
வாழ்க்கை விளையாடலில்..
வெற்றி கண்டது பெரும்பான்மை.....

19 January 2011

அல்லாஹ்......!!!

கருணை நிறைந்த இறைவன்...
            அல்லாஹ்..!

பொருமை நிறைந்த இறைவன்..
            அல்லாஹ்..!!

பெரும் புகழுக்கு உரிய இறைவன்..
            அல்லாஹ்..!

நாங்கள் உன்னிடமே மீழ்வோம்....
            சுபஹானல்லாஹ்...!

மாநபி வழி தந்த இறைவன்...
           அல்லாஹ்...!

இறைமறையை இறக்கிய இறைவன்..
           அல்லாஹ்...!

உடல் உயிர் கொடுத்த இறைவன்..
           அல்லாஹ்..!

நாங்கள் வணங்கும் இறைவன்..
           அல்லாஹ்..!!

நன்மை தீமை பிரித்த இறைவன்...
           அல்லாஹ்...!

ஐந்து கடமை அளித்த இறைவன்..
           அல்லாஹ்....!

வணங்குதல் ஒன்றே உனக்களிப்பேன்..
நன்றி கொண்டு வாழ நான் மறப்பேனா..

உன் புகழ் உலகம் நிறைக்க..
உன் அடிமை நானாக இருப்பேன்....

18 January 2011

தேர்தல்-அரசியல்வாதிகள்-மக்கள்..

உள்ளம் உண்மை சுமக்கிறது..
நாக்கு மட்டும் மறுப்பு-அறிக்கை...

வாக்காளர்கள் வசதி பெருவார்கள்..
ஓட்டுக்கு விலை நிர்ணயம்..

வாக்காளருக்கு அளித்த வாக்குறுதி..
அன்றே அப்பவே நிறைவேற்றபட்டது...

தேர்தல் பிரச்சாரம் நடிகர் நடிகைகள்..
கூட்டகூட்டமாய் பொதுமக்கள்...

ஜாதி தலைவர்களுக்கு அவசர அழைப்பு..
ஆதரவு அளிக்க பல கோடியில் நன்கொடை...

தேர்தல் அறிக்கை..
மகிழ்ச்சியில்  பொதுமக்கள்..

தேர்தல் வாக்குறுதி..
மறந்துபோன பொதுமக்கள்...

வெள்ள நிவாரணம் பங்கீட்டு கொண்ட..
ஆட்சியாளர்கள் அதிகாரிகள்...

நல்ல பண்புள்ள நேர்மைகொண்ட...
அரசியல்வாதிகள்......
வேட்பாளராய் இருக்கும்வரை..

பதவி ஆசையில்லாத அரசியல்வாதிகளுக்கு..
பலகோடியில் சொத்து..

அமைச்சர் மறந்த தொகுதி..
நினைவூட்டிய நிருபர்கள்...

நல்லவைகளை செய்தால்..
குறை சொல்லும் அரசியல்வாதிகள்..
நல்லவைகளை செய்யாமல் இருந்தால்
குறை சொல்லும் பத்திரிக்கைகள்..

தேர்தல் ஆணையம் புதிய கட்டுபாடு..
அறிக்கையில் மட்டும் அரங்கேறியது..

அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குகின்ற..
அனாதைகளை போல..
நல்லோர் ஆள ஏங்குகின்ற இந்தியா,,,,,

17 January 2011

சகோதரர்களே. உங்களுக்காக...

விடியலுக்கு முன்னே விழி..
விரைய்வாய் செயல் படு..
விளைவுகளை எதிர்கொள்..

இஸ்லாம் ஏற்று..
ஓர் இறை வணங்கு..
அளவாய் பேசு..
நிறைவாய் பழகு..

அறிவாய் செயல் படு..
அமைதியை நாடு..
உண்மையை நேசி..
உழைப்பாள் உயரு..

உறுதியாய் இரு..
கடந்த காலத்தை படி..
நிகழ்காலத்தை பார்..
வருங்காலத்தை நலமாக்கு..
வலமாக்கு..

சுத்தம் செய்..
சுகாதாரத்தை கவனி..
ரத்தம் கொடு..
யுத்தம் நிறுத்து..

அன்பை விரி..
மகிழ்ச்சியை மலரச்செய்..
வருமை ஒழி..
புதுமை செய்..

தர்மத்தை கொடு..
ஒழுக்கத்தை பேணு..
நீதியை நிலை நாட்டு..
நல்லிணக்க நட்பை திற..

புறம் பேசாத..
கோல் மூட்டாத..
இட்டு கட்டாத..
கர்வம் கொள்ளாத..
இணை வைக்காத..
வாழ பழகு......

ஹைக்கூவில் ஒரு கலவை...

என்றைக்கோ பெய்த மழை..
இன்று நனைகிறேன்..
மாற்று உடை இல்லாமல்...

ஏழையின் கனவில்..
குறைவான ஆசைகளே..
வருமைக்குள் வலம் வந்தது...

உதரிய்ய பூக்கள்..
சிதரிய்ய புன்னகை...

அன்பு அறிவு அமைதி அடக்கம்..
உழைப்பு உண்மை உறுதி உயர்வு தரும்..

கல் சிற்பி சிலை சிற்பம்..
சிலைகள் மறுக்காதவரையில்....

பணம் சொத்து உடமை..
அணிந்து அனுபவிக்கும் ஆசை..
உயிர் இருக்கும் வரை...

பஞ்சம் லஞ்சம் ஊழல் வருமை..
கொலை கொள்ளை வட்டி பசி..
இல்லாத உலகம் என் கனவில்..
நடந்தேறிய உண்மை..

பூ மணம் புன்னகை மென்மை..
தேன் அழகு கலை ஆயுள்..
ஒரு நாள் வாழ்க்கை...

16 January 2011

நாடும் நடப்பும்.....

 நிலவை மோசடியில் கூட்டுறவுகள்..
வட்டியின் வளர்ச்சியில் செல்வந்தர்கள்..
அனைத்து துறைகளிளும் ஊழல்கள்..

லஞ்சத்தில் அரசு துறைகள்..
ரவுடிகளை பனியமர்த்திய்ய வங்கிகள்..
வாக்குறுதிகளை வாரி இறைக்கும் கட்சிகள்..

காவல்துறை கண்கானிப்பில் நடந்த நிகழ்வுகள்..
தூர்வார்படாத குளங்கள்...
ஆற்று மணலில் அரசியல் நாடகம்..

ஒரு நாள் முழுவதும் கையேந்தி பிச்சை எடுத்தும்..
ஒரு வேலை சோற்றுக்கு சேராத பணம்..
நாகரீகத்தை உடுத்திய மனிதன்..
ஒழுக்கத்தை இழந்தான்..
வட்டியை பெருக்க நினைத்த மனிதன்..
தர்மத்தை மறந்தான்....

உயிரை கூட மனிதன்..
உணர தவறிவிட்டான்...
மரணத்தை மறந்த மனிதன்
பகிர்ந்து வாழ மறந்தான்....

15 January 2011

உண்மைகள்...

குண்டு மழையிலும்..
பீரங்கி தாக்குதலிலும்..
உயிரை துளைக்கிற..
துப்பாக்கி முனையிலும்..
வாழ்ந்து பழகிப்போன..
பாலஸ்தீனர்கள்....

ஆப்பிரிக்க மக்களின்..
வருமை கண்ட நான்..
கண்ணீரில் முழ்கினேன்..

என் கண்ணீர் எழுதிய..
கண்ணீர் மழையில்..
ஈராக்கில் வெள்ளம்..

ஆப்கானிஸ்தான் மக்களின்..
உறுதியான உள்ளம் கண்டு..
உருகிதான்போனேன்..

மண்ணுரிமை போராட்டம்..
இனப்போராட்டமாக மாறி..
இனவெறியாக மாறி..
இனபடுகொலையாக..
உருவெடுத்து அகதிகளை..
அதிகபடுத்தியது இலங்கை...

இந்தியா ஏழை நாடு..
ஏழைகளை ஏழைகளாகவே....
வைத்திருக்கும்....
ஏழை நாடு இந்தியா....

14 January 2011

ஓர் இறை நம்பிக்கையாளர்களே....!

இஸ்லாம் கேட்கிறது..
நீங்கள் எந்த மார்க்கத்தை..
பின்பற்றுகிறீர்கள்..

உண்மையை உங்கள்..
உள்ளத்தோடு உரசி பாருங்கள்..
தெரிந்து தெளிந்து மாநபிவழி நடந்தால்..
மறுமை வெற்றி நமக்குத்தான்..

பெண்வீட்டார் வீடு கொடுக்கும் முறை..
மாப்பிள்ளை வீட்டார் வீடு வாங்கும் முறை..
ஒரு சில ஊர்களிள் இருக்கத்தான்..
செய்கிறது....

நம் சமுதாய பெரியார்களே...
நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டு காலம்தான்..
அறியாமையில் வாழ்வீர்கள்..
வாழச்சொல்வீர்கள்..

அல்லாஹ்வின் வேதத்தை..
கற்க நேரம் ஒதுக்குவோம்..
அறிந்து வாழ்வதற்கு ஆய்வு செய்வோம்..
நபிவழி நடக்கும் சமூகமாக..
மாற்றி காட்டுவோம்....

இணைவைப்பதிலிருந்து விடுபட..
வட்டி வாங்குவதிலிருந்து விடுபட..
வரதட்சனைவாங்குவதிலிருந்து விடுபட..
தர்கா வழிபாட்டில் இருந்து விடுபட..
இந்த சீர்கெடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து..
ஏன்?   இன்னும்  விடுபடமுடியவில்லை........

12 January 2011

ஹைக்கூவில் ஒரு குரல்...

ஹைக்கூவில் ஒரு குரல்.....

அதிகாலை சோம்பேறி நான்..
ஒய்வு எடுக்க ஒய்யாமல்..
உழைக்கிறேன்....

நேற்றைய்ய சம்பவம்..
இன்றைய்ய நிலை..
நாளைய்ய மாற்றம்...

கண்ணாடியில் முகம் பார்த்தேன்..
இதயத்தில் உன் உருவம்..

பால் பவுடர் குடித்து வளர்ந்த...
குழந்தையின் தாய் பாசம்...

அன்பும் அரவனைப்பும்..
ஆற்ற வேண்டிய தாய்..
விலை பேசி விற்றால்..

முதியோர் இல்லம்..
அதிகம் திறந்த பட்டியலில்..
இந்தியாவுக்கு முதலிடம்....

லஞ்சம் வாங்கிய போது பிடிப்பட்ட..
லஞ்ச ஒழிப்பு அதிகாரி....

எடை குறைப்பு செய்யாத..
கூட்டுறவு அங்காடி ஊழியர்...

லஞ்சம் கொடுக்காத வாங்காத..
நிலம் பத்திர அலுவலகத்தில்..
பத்திரம் பதிவு செய்து வாங்கப்பட்டது...

நெஞ்சம் பொருக்குதில்லை..
அறியாமை சமூகத்தின்..
அவலங்ளை..............

10 January 2011

நிகழ் காலத்தின் வெளிச்சம்....

இதுவும் ஒரு உண்மை..
மார்க்கத்தை புறந்தள்ளி விட்டு..
சமுதாய சீர்கேட்டை.....
காலகாலமாய் நடைமுறை படுத்தும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

சமாதிகளிள் கையேந்தி..
படைத்தவனிடம் சிபாரிசு..
செய்ய சொல்லும் அறியாமையிலும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

கட்சிகளாய் காட்சிகளாய்..
இயக்கங்களாய் பிரிவுகளாய்..
கோஷ்டிகளாய் துண்டு துண்டாய்..
சிதறி கிடக்கும் நம் பெருமக்கள்..
இதுவும் ஒரு உண்மை....

வரதட்சனை மனிதாபிமானம்..
தொலைத்த மனிதர்களின்..
மார்க்கம் அறியாத அல்லது..
அறிந்தும் அறியாத..
குருடர்களாய் செவிடர்களாய் பேரம்..
 பேசும் நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை....

08 January 2011

படிக்க பயன்பெற....

ஆதம் ஹவ்வா வாரிசுகள்...
சீர்கேட்டின் சீற்றத்தால்....
அடித்து செல்லப்பட்டார்கள்...

உலகபிரமாண்டத்தை சிந்திப்போர்..
சிறந்த மார்க்கத்தை தேர்ந்தெடுப்பர்..

பிறப்பிடமும் இறப்பிடமும்..
அறியாத அறியமுடியாத..
பகுத்தறிவாளர்கள்...

நிலைகள் மட்டும் நிலைத்தே இருக்கிறது..
அன்பு அறிதாய் இருக்கிறது..
ஆவல்கள் அதிகமாக இருக்கிறது...

ஆடுவோரும் பாடுவோரும்..
அறிவதில்லை ஏழையின் பசியை...

பூக்கள்தான் புன்னகைகிறது..
மனிதர்கள் பறிப்பதற்காக...

காகித பட்டறையில்..
கல்வி விதை....

உண்மை பேசுமா?
நீதி வெல்லுமா?
நம் நாட்டில்...??

பல தோல்வியில்தான்..
வெற்றி இருக்கிறது...

நம்பிக்கையில் இருந்து..
முயற்சியில் தொடங்கு..
உழைப்பில் தொடரு..
வெற்றியில் முடியும்....

07 January 2011

ஏகத்துவம் ஒரு விளக்கம்....!

ஓர் இறைவன்...

அல்லாஹ் படைத்தவன்..
பராமரிப்பவன்..

அளந்தவன் அளப்பவன்..
அறிந்தவன் ஆழ்பவன்..

அழிப்பவன் உயிர் எழுப்புபவன்..
புகழுக்கு உரியவன்..

புகழ் அல்லாஹ்வுக்கு உரித்தானது..
புகழ் எவருக்கும் செலுத்த இயலாது..
முடியாது கூடாது...

நம் தூதருக்கு வஹி மூலம்..
வழங்கிய அழகிய அல்குர்ஆனில்..
அடுக்கடுக்கான ஏராளமான..
வசனங்கள்  சிறந்த  ஆதாரங்கள்..

இதுதான் ஏகத்துக்கும் தத்துவம்..
ஏகத்துவம் ஒரு விளக்கம்..

எது? இணை வைத்தல்..
எது? இணை வைத்தல்லாகது..

ஓர் இறை நம்பிக்கையாளன்..
ஏன்? மனித புகழ் புகட்ட வேண்டும்..

ஏன்? சமாதான சாதூர்யத்தை கொண்டு..
புகழை பிரித்து விளக்கத்தை..
விரிவாக்க வேண்டும்..

சிந்திக்க சிதைக்காமல் இருக்க..
ஓர் இறை போற்ற..

ஓரணியில் திரள..
ஓர் ஆய்வுக்குள் ஒன்று பட்டு வாழ..
ஓர் இறை துணை வேண்டும்....

06 January 2011

சிந்திக்க மட்டும்....

எழுதுகிறேன் எழுச்சி பெறாத...
என் சமூகத்தின் வெளிச்சத்தை...

அன்பை எல்லோரும் போதிக்கிறார்கள்..
போர் குணம் படைத்தவர்களாய்....

ஆசைக்கு எல்லாம் தேவை..
முடியாமைக்கு எல்லாம் தேவையில்லை...

குழந்தையின் கதறல்..
மறுக்கப்பட்ட தாய் பால்...

சிலர் எழுதுவதை..
பலர் படிப்பதில்லை....

அறிந்தவர்கள் செயல் படவில்லை..
அறியாதவர்கள் அறிய முற்படவில்லை...

கணத்துப்போன பாவங்கள்..
மறுமை குற்றவாளியாய் மனிதர்கள்...

நேசத்தை சந்தேகிப்பது நல்லது..
போலியை வெளிப்படுத்தும்...

தாய் சுமந்த தனயன்..
தனயன் செலுத்தாத நன்றி கடன்...

கற்காத கற்ப்பிக்கும்..
முயற்சியில் வெற்றி...

மாணவிகள் மாணவர்களை..
குறைவான மதிப்பெண் பெற..
வாய்ப்பளித்தார்கள்...

இளைஞர்களின் இளமை காலத்து கனவு..
கற்பனை இல்லாமல் இருந்தது...

மனிதர்களுக்கு மன்னிக்க தெரியவில்லை..
மன்னிக்க கூடிய ஓர் இறைவனிடம்..
மன்னிக்க கேக்கவும் தெரியவில்லை....

05 January 2011

அறிந்தும் அறியாமலும்....

 நேசிக்க தெரியாதவர்கள்..
 சுவாசிக்க தெரியாதவர்கள்..

உண்மை வெளிச்சம் கொண்டவை..
தாமதமாய் வெளிபடுத்தும்..

பிறப்பில் தொடங்கிய பயணம்..
இறப்பில் நிறைவடைந்தது..
வாழ்க்கை பதிவுகள்...

பொருமையும் சோம்பேறியும்..
பிரித்து பார்க்க முடியாதவை..

உன் நேசத்தில் மகிழ்ந்தேன்..
உன் வெருப்பில் மகிழ்ந்து..
கொண்டியிருகிறேன்.....

தங்கம் பசியை போக்கவில்லை..
அணிந்து மகிழ அள்ளள் படும்..
மனிதர்கள்....

தேடுதல்தான் வெற்றியின்..
இலக்கை அடைய்ய முடியும்..

நம்பிக்கையோடு முயற்சித்தால்..
வெற்றிதான் எல்லை.....

ஒழுக்கத்தை எப்போதும்..
உரசி பார்க்கும் நம் பலவீணம்..

காதலில் ஒரு முறையாவது..
தோற்றுவிடு நெறியான வாழ்க்கைக்கு..
உதவி புரியும்....

அறியாதவன் எழுதியதை..
அறிந்தவர்கள் கருத்துரைக்க..
வாக்களிக்க வாய்ப்பு.....

04 January 2011

இளைஞர்களே..! உங்களுக்காக...

உன் சொல்லும் செயலும்..
வரலாறு வரவேற்க வேண்டும்..

கற்பனையில் கூட உன் மானத்தை..
விற்பனை செய்து விடாதே..

பூக்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை..
அது கூட புன்னகையோடு..
மரணிக்கிறது...

நன்றி கெட்டவனாய் வாழ்வதை விட..
நல்லவனாய் மரணித்து விடு....

நீ-வாழும் போதே உன் தர்மம்..
ஏழையை வாழவைக்க வேண்டும்..

உனக்கா வாழுகிற வாழ்க்கை..
உறவுக்காக வாழுகிற வாழ்க்கை..

உற்றார்க்காக வாழுகிற வாழ்க்கை..
ஊருக்காக வாழுகிற வாழ்க்கை..

உலகுக்காக வாழுகிற வாழ்க்கை..
எதையும் உதறிவிடாதே...

புத்தக மோகம் எழுத்து தாகம்..
படிக்கும் பாகம் கற்று கற்ப்பிக்கும்..
கல்வி பரிமாணம் உனக்குள்..
இருக்கும் செல்வம்......

03 January 2011

இதப்படிங்க முதல்ல......

விடியல் சொன்னது..
உழைத்து வாழ் என்று....

உண்மை உள்ளத்தில்...
சுமந்தே வாழ்....

விளைவுகள் விளைகிறது...
சந்தர்ப்பவாதிகளாள்...

பதவி என்பது பரிசோதிக்கும்..
இயந்திரம் போன்றது....

பதவி கொடுத்து...
சோதித்த பொதுமக்கள்..
பொதுமக்கள் சுமக்கும்..
சோதனைகள்...

ஆளும் ஆணவம் கர்வம்..
ஊழல்களாக உருவெடுத்தது...

வியாபார விளிம்பில்..
வணிகமானது..
மனித சிந்தனைகள்...

உழைக்க மறக்கவும் மறுக்கவும்..
இலவசம் உதவி புரிகிறது...

லச்சம் கோடி ஊழல்..
நீதி மன்றங்கள் விலை பேசப்படும்..
சட்டம் எங்கே? தண்டனை வழங்குவது...

முப்படை கொண்டும்..
அழிக்க ஒழிக்க முடியாத..
நம் நாட்டின் லஞ்சம்...

வழிபறி கொள்ளையர்களின்..
வலமான வாழ்வு...

நம் நாட்டு கலாச்சாரத்தை..
கட்டிக்காக்கும் நடிகைகள்..

கடந்த காலத்தை படிக்கும்..
இளைஞர்கள் வருங்காலத்தை..
படிக்கவில்லை....

01 January 2011

ஆறாவது -அறிவு....

ஏதோ உனக்கு..
கோளாரு இருக்கிறது..

சிந்திக்காத தடம் புரளும்..
உன்னை என்ன செய்வது..

மறக்க பிறந்த -அறிவாய்..
நீ ஏன்? இன்னும் இருக்கிறாய்..

சொல் காத்து வாழ..
செயல் காத்து வாழ..

உலகில் அமைதி நிலவ..
மனிதனுக்குள் தழைக்காமல்..
விதையாகவே இருக்கிறாய்...

உன் மீது போர் குற்றம்..
சுமத்தினால் என்ன தவறு..

விண்ணுக்கு சென்று வர..
உதவியது நீ...

மண்ணுக்குள் மகிழ்ந்து வாழ..
மனம் வைக்கலாகதா..?

நாகரீக கலாச்சார நச்சை..
அரை நிர்வாண இழுக்கை..
மதம்- நிறம்-மொழி-வெறி-கொச்சை..
வளர்ச்சி என்று வர்ணிக்கிற..
உன்னை தேவை என்பதா ..?

நீ-எனக்குள் இல்லை என்றால்..
முழு மனிதனாக இருக்க..
வாய்ப்பு இல்லை...

நீ நானாக மட்டும் இல்லாமல்..
நாங்களாக நன்மையாக..
நட்பாக நலமாக வலமாக..
எல்லோருக்குள்ளும்..
குடியேறி விருட்சமாய்..
விழித்தெழு உலகில்..
அமைதி அறவ உன் சேவை..
தேவையாக இருக்கிறது....