அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

30 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-10.

இறைவனின் தூதர்..
உலக மனிதகுலத்திற்கு..
நியமிக்கப்பட்ட இறுதி தூதர்..
மனிதயினத்தின் போதகர்..

ஒன்றே குலம் ஒருவனே இறைவன்..
என்று ஒரே மார்க்கத்தை சொல்லி..
மகிழ்ச்சியில் ஆழ்தினார்...

மதங்கள் இல்லை..
ஜாதிகள் இல்லை..
நிறவெறி இல்லை..
மொழிவெறி இல்லை...
என்று ஒரே தாய் தந்தையரின்..
வழி தோன்றலே என்று..
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று..
பிரித்து பார்ப்பதை ஒழித்தார்...

நேர்வழியை நிலை நாட்டினார்..
 நன்மை செய்ய ஏவினார்..

அறிந்தவரும் அறியாதவரும்..
சமமாக மாட்டார்கள் என்று..
தெரிந்து தெளிந்து வாழ..
அறியாமை திரையை விலக்கியவர்...

இஸ்லாம் படைத்தவனின் மார்க்கம்..
அறிந்தோருக்கு நேர் வழி இருக்கிறது..
என்று படைத்தவன்  மீது சத்தியமிட்டு..
சாட்சியளித்தார்...

போர் செய்ய ஆணையிட்டு...
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து..
கொண்டுயிருக்கிற தலைவரல்ல..

போர் களத்தில்..
தலைமை தாங்கிய தலைவர்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..


26 March 2011

முதிர் கன்னியின் குமுறல்கள்...

பெண் கேக்க வந்தவுக...
பொண் கேட்டாக..
பொருள் கேட்டாக..

மணக்க  வந்தவுக..
பெண்ன கேட்பாகளா..
பொண்ன  கேட்பாகளா..

 உழைக்கிறவுக...
உள்ளத்த கேட்பாக..
உறவ கேட்பாக...
சொகத்த கேட்பாக...
சொத்தையா ? கேட்பாக...

மலர் என்றாக..
மணம் என்றாக..
மதி என்றாக.. 
பெண்மை என்றாக..
மென்மை என்றாக..
மணக்கத்தான்..
வரம் கேட்டாக..

வாழ்க்கை பூக்காமலே..
வாழா வெட்டியாய்..
சமூக வழக்கத்த..
வாழையாடி வாழையாய்..
வாழ வைக்கிறாக...

கழுதைக்கு  வாக்கப்பட்டாலும்..
இன்பம் இல்ல..
இழப்பும் இல்ல....

18 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-9.

அன்போடும் ஆதரவோடும்..
அரவணைத்தார்..

உயர் குலமென்று தங்களைத் தாங்களே..
கருதிய குரைஷியர்கள் இழித்தார்கள்..
பழித்தார்கள் கேலிசெய்தார்கள்..
கேள்விமேல் கேள்வி கேட்டார்கள்..

அமைதி காத்த அண்ணலார்..
இஸ்லாத்தை குரைஷியர்களின்..
உள்ளத்தில் சேர்ப்பதில்..
கவனம்கொண்டார்....

இடி முழக்கத்தை..
மின்னல் வெளிச்சத்தை..
மழை வெள்ளத்தை..
நிலநடுக்க பூகம்பத்தை..
பெரும் புயலை பெரும் கடலில்..
ஏற்படும் அழிவை..
அச்சத்தோடு அறிவித்தார்...

காலம் விரையமாக்குபவர்களில்..
ஒருவராக நீங்கள் இருந்து விடவேண்டாம்..
என்று எச்சரித்து கொண்டே இருந்தார்..

வண்ணம் தீட்டுவதில் ஏக இறைவனே...
வல்லவன் என்றார்..

வல்லவனின் வலிமையைச் சொல்லி..
வரலாறாய் வாழ்ந்தார்..

கல்லறையின் கொடுமையை சொல்லி..
கண்ணீர் வடித்தார்...

நரகத்தின் கொடுமையை சொன்ன..
இறைவனிடம் இறைஞ்சினார்..

அறுபத்து மூன்று ஆண்டுகால வாழ்வில்..
உலகம் படைக்கப்பட்டது முதல்..
உலகம் அழி்க்கப்படும் வரை..
இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளையும்..
நினைவில் நிலைக்க செய்த..
சிறப்பான தூதர்..

மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் நல்வழியாய்..
தன் வாழ்வியலை வகுத்தார்...
அழகிய முன் மாதிரி முஹம்மத்...




14 March 2011

யா-அல்லாஹ்....!


யா-அல்லாஹ்..!
எங்கள் மீது கருணை..
உன் நிழலில் நாங்கள்..

யா-அல்லாஹ்..!
நிரந்திரமானவன் நீ..!
எங்கள் பாவங்கள் மன்னிக்க..
போதுமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
மறையருளி மாநபி..
வழி வகுத்தவன் நீ..!
புகழுக்கு உரிமையாளன் நீ..!

யா-அல்லாஹ்..!
ஒளிமையமானவன் நீ..!
இணையற்ற தனித்துவமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
படைப்பதும் -அழிப்பதும்..
உயிர் எழுப்புவதும்..
உனக்கு எளிதே..!

யா-அல்லாஹ்..!
உரக்கச்சொல்வோம்..
 நீ-ஒருவனே இறைவன் என்று..

யா-அல்லாஹ்...!
நன்றி மறந்த கூட்டத்தார்களில்
ஒருவராக எங்களை ஆக்கிவிடாதே..
ஏந்தல் நபி போதித்த..
ஏகத்துவ வழியில் தடம்புரழாமல்...
வாழ உன் துணை வேண்டும்..









08 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-8



எந்த தற்பெருமையும்..
ஏற்காத ஏந்தலானார்..

உயரிய புகழை உரியவனுக்கே..
உயர்ந்தவனுக்கே உரித்தாகுக..
என்று உரைத்தலானார்..

ஏக இறையோனின் ஆணைகளை..
மொளனத்தில் கவணத்தில்..
தன்னுல் பதியவைத்தார்...

வாழ்ந்ததில் சிறப்பு..
வாழ்வதில் சிறப்பு...
வாழ்வதற்கு சிறப்பாய்..
வழிகாட்டினார்...

மனிதகுலத்திற்கு இறுதி தூதர்..
இணைவைக்காமல் வாழச்சொன்ன..
இனிய போதகர்..

வல்லோனின் பிரியமான..
வானவர்களிடம் உரையாடிய..
அழகிய நேசகர்....

விஞ்ஞானம் விதையாக..
இருக்காத காலத்தில்..
வானத்தில் உள்ளதை பற்றி..
பூமியில் உள்ளதை பற்றி..
படைப்பை பற்றி..
படைப்புகளின் வளர்ச்சிகளை பற்றி..
மரணத்தை பற்றி மறுமையை பற்றி..
தீர்ப்பு நாளை பற்றி..
சொர்க்கத்தை பற்றி..
நரகத்தை பற்றி..
முன் அறிவிப்பு செய்தார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்....

05 March 2011

அன்புள்ள ஆட்சியாளர்களுக்கு....



ஒடுக்கப்பட்டோம்..
உரிமை பறிகப்பட்டோம்..

பாலைவனத்தில்..
பரிதவிக்கப்பட்டோம்..

இயந்திரமாய் இருந்துவிட்டோம்..
இனியும் வரும் தலைமுறையை..
விடமாட்டோம்...

ஒரணி திட்டம் தொடங்கிவிட்டோம்..
அறியாமை வாசலை..
அடைத்துவிட்டோம்...

நிலையானவனின் நீதியானவனின்..
அடிமைதான் நாங்கள்..

யாருக்கும் எவருக்கும்...
அடிபணியமாட்டோம்..

அநீதி தழைக்க இனியும்..
பொருக்கமாட்டோம்..

குரல் கொடுக்கவும்..
போராட்டம்தொடுக்கவும்..
உயிர் துறக்கவும் துணிந்துவிட்டோம்...

சம உரிமை கிடைக்கும் வரை...
சம வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை...

போதும் சிறுபான்மை என்று..
சிறுமை படுத்தியது..

இந்தியாவின் இரண்டாவது..
பெரும்பான்மை மக்கள்தான் நாங்கள்..

இடஒதுக்கீடு எங்கள் வருங்கால..
தலைமுறைகளின் கனவு..

ஆட்சியாளர்கள் இன்றே இப்பவே..
சடடமாக்கவேண்டும்..

வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ..
அதிகார பகீர்வுவேண்டும்...

02 March 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-7

அறியாமை காலத்தில்..
அறிவுடையோர் சிலர்..
அதிசியக்க ஆச்சரியக்க..
இலக்கணத்தோடு..
இலக்கியத்தோடு வாசித்து..
வியக்க வைத்தார்..

அரசாங்க மாளிகை பாலைவன...
குடிசையாய் இருந்தது..

அரசாங்க இருப்பில் உள்ளது..
ஏழைகளுக்கே உரியது என்று..
கொடுக்கும் முறையை..
திட்டமிட்டு வரைமுறைபடுத்தினார்...

மாற்று ஆடைஒன்று மட்டுமே..
வைத்திருந்த மாபெரும்...
தலைவர் ஆவார்....

தன்னை தூற்றுவோரை..
ஓர் இறையை போற்றுவோராய்..
 மாற்றினார்..

இணையில்லா ஏக இறையோனை..
ஏற்காமல் ஏற்றும் வணங்காமல்..
மரணித்து விடாதீர்கள் என்று..
அச்சத்தோடு எச்சரித்தார்...

ஆடு மேய்க்கும் கூட்டத்தார்களிடம்..
இஸ்லாம் மார்க்கம் போதித்த மாண்பு..

ஒப்பில்லா ஓர் இறை புகழ் ஓங்க..
ஓரணி தொடங்கினார்...

உலகத்தலைவர்..
சுவனத்தின் தலைமகன்...

பெண்களை அடிமை படுத்தி..
கேவலபடுத்தி ஆபாசபடுத்தி..
வந்த காலத்தில்..
பெண்மையின் தன்மையும்..
தாய்மையின் சிறப்பையும்..
சிந்திக்க சிறப்பித்தார்..

உள்ளத்தால் பிராத்தனை செய்ய..
உயர்ந்தவனை நினைவுகூர்ந்தார்...
அழகிய முன் மாதிரி முஹம்மத்...!!!