அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

31 December 2012

யா அல்லாஹ்..!



எல்லோரும் எல்லாமும்..
 
பெற வேண்டும்..

எல்லா புகழும் உனக்கே..
 
உரித்தாக்க வேண்டும்..

அமைதி எங்கும் நிலவ வேண்டும்..

எங்கள் பாவங்களை..
 
நீ மன்னிக்கவேண்டும்..

கேலியும் கிண்டலும் புறம் பேசுதலும்..

எங்களை விட்டு விலக வேண்டும்..

ஐந்து கடமையை பேணுவோராய்..

நாங்கள் வாழவேண்டும்...

முப்பொழும் உன் நினைவில்..

எங்கள் வாழ்க்கை வேண்டும்..

நூர் முஹம்மதின்..
 
அழகை காணவேண்டும்..

அந்த ஆனந்தம் தழைத்து..
 
 நிலைக்கவேண்டும்..

மறுமை வெற்றியாளர்களாய்..

உன்னை சந்திக்கவேண்டும்...

உன்னை சந்தித்த மகிழ்ச்சி விளிம்பில்..

நாங்கள் மிளிரவேண்டும்...

இம்மையிலும் மறுமையிலும்..

உன் -அடிமையாகவே நாங்கள்...

உன் புகழை போற்றவேண்டும்..

08 December 2012

எங்கள் முஹம்மத்(ஸல்) -அழகிய முன் மாதிரி..!





ஒப்பற்ற இறைவனுக்கு..!
...

ஒளிமையமான இறைவனுக்கு..!

உலகம் நிறைக்க...

புகழ் சேர்த்த உத்தமர்..

தூய்மையான இறைவனுக்கு..!

தூதராய் பணியாற்றிய...

நபித்துவத்தின் நன்மாராயம்..!

படைப்புகளை வணங்கி வந்த..

மனித சமூகத்தில்..

படைத்தவனை வணங்கச்சொன்ன..

இறுதி இறைத்தூதர்...!

சொல்லெறிந்து தூற்றியபோதும்..

கல்லெறிந்து பல் உடைந்தபோதும்..

சத்தியத்தின் பால் -அழைத்த...

சிறந்த போதகர்...!

அல்லாஹ்வின் அடிமை என்று..

அழைக்கச்சொல்லி மகிழ்ந்த..

மாமனிதர்...

நீதியை நிலைனாட்டி..

நீதியை பேணச்சொல்லி...

நீதியாகவே வாழ்ந்த வரலாறு..!

சத்தியமார்க்கத்தின்..

சாதனை பெட்டகம்...

அறிவுடையோருக்கு..

நேர்வழிக்காட்டி..

அச்சமூட்டி எச்சரிக்கை செய்த...

எங்கள் முஹம்மத்(ஸல்)

அழகிய முன் மாதிரி...

07 December 2012

டிசம்பர் -6- மறக்கமுடியுமா...



பாபர் மசூதியை மட்டுமா இடித்தீர்கள்..

இந்தியாவின் ஜனநாயகத்தை இடித்தீர்கள்..

...
மத நல்லிணக்கத்தை இடித்தீர்கள்...

நீதி மன்றங்கள் மீது நாங்கள் வைத்திருந்த..

நம்பிக்கையை இடித்தீர்கள்...

இடித்தவர்களுக்கு இரண்டு பங்கும்..

இழந்தவர்களுக்கு ஒரு பங்கும் வழங்கிய..

நீதிமன்ற தீர்ப்பு உலகில் தலைகுனியவைத்தது...

அரசியல் தலைவர்கள் எல்லாம் ஓட்டு பொருக்கிகளாய்..

இருந்துவிடாமல் பாபர் மசூதியை மீட்க உங்கள் குரலும்..

ஒலிக்கவேண்டும் நீதியின் பக்கம் மாற்று மத சகோதரர்களே.!

நடு்நிலை கொண்ட ஊடகங்களே உங்கள் குரலும் இன்றே..

இப்பவே ஒலிக்கவேண்டும் பாபர் மீட்ககும் வரை....

எங்கள் குரல் ஓயாது் எங்கள் உள்ளத்தை விட்டு அகலாது..

18 September 2012

எங்கள் முஹம்மத்..

எங்கள் முஹம்மத்..

அழகிய முன் மாதிரி..!

படைத்தவனின் தூதர்..

...
மனிதர்களில் மாணிக்கம்...

படைப்புகளை விடுத்து..

படைத்தவனை வணங்கச்சொன்ன..

பண்பாளர்...!

எழுத படிக்க தெரியாத...

ஏகன் தீட்டிய வைரம்..!

சத்திய மார்க்கத்தை..

சாந்திய வழியில் தந்த..

வாழ்வியல் வசந்தம்..!

கல் சிலை வணங்கி வந்து..

தீண்டாமை தழைத்த..

சமுதாயத்தை சீர்படுத்திய..

சமத்துவ எழுச்சி...

ஒப்பற்ற இறைவனின்..

ஓர் இறை கொள்கையை..

எளிமையில் எடுத்துரைத்த...

எம்பெருமானார்...

மனிதகுல ஒழுக்கத்திற்கு..

மாமருந்து...

பகுத்தறிவு விடியல்..

ஐந்து கடமை தந்து...

பேணி பேணச்சொன்ன..

பத்தரை மாதத்து தங்கம்...

எங்கள் முஹம்மத்..!

அழகிய முன் மாதிரி...

12 August 2012

யா அல்லாஹ்..!



நீ ஒளிமையமானவன்..!

நீ தூய்மையானவன்..!

...
நீ பேரருளாலன்..!

நீ பேரன்புடையோன்..!

நீ இரக்கமுடையோன்..!

நீ வல்லமையுடையோன்..!

நீ எந்த தேவையும் -அற்றவன்..!

நீ பெரும்கொடையாளன்..!

நீ செவியேற்பவன்..!

நீ பார்த்துகொண்டியிருப்பவன்..!

நீ நன்குகறிந்தவன்..!

நீ அர்ஷின் அதிபதி..!

நீ ஏகத்துக்கும் ஆட்சியாளன்..!

நீ ஏகத்துவம் தந்த ஏகவன்...!

நீ படைத்தவன்..!

நீ அளப்பவன்...!

நீ நிலைத்தவன்...!

நீ மாறையும் மாநபிவழியும் தந்தவன்..!

நீ வணங்குவதற்கு உரியவன்..!

நீ புகழுவதற்கு உரித்தானவன்..!

நீ ஒருவன்தான் எங்கள் இறைவன்..!!!

06 August 2012

அழகிய முன் மாதிரி முஹம்மத் (ஸல்)



ஏக இறைவனின் தூதர் என்றார்..

ஆடு மேய்த்த தொழிலாளியாகவே வாழ்ந்தார்..

...
படைப்புகளை வணங்க இயலாதன்றார்...

படைத்தவனை வணங்கியும்..

வணங்கவும் சொன்னார்..

மனிதர்கள் கற்பனைக்க முடியாத..

வேதத்தை தந்தார்...

ஏக இறைவனின் வார்த்தை என்றார்...

வட்டி வாங்குவதும் கொடுப்பதும்..

சாட்சியாய் இருப்பதும் கூடாதன்றார்...

வட்டியில்லாத நிதியத்தை நிறுவினார்...

ஏற்றத்தாழ்வு கற்பிப்பது கூடாதன்றார்...

சகோதரத்துவ மார்க்கத்தை சமர்பித்தார்..

விதவை வாழ்க்கை கூடாதன்றார்...

விதவைகளை மணமுடித்து..

மறுவாழ்வு சமுதாயத்தை மலரச்செய்தார்....

மொழி வெறி கூடாதன்றார்...

பிறமொழிகளுக்காக அரபிமொழிக்கு...

எந்த சிறப்பும் இல்லை என்றார்...

ஏக இறையோனை ஏற்காத சமுதாயத்தை..

பார்த்து கவலை கொண்டார்..

பண்பட்டு வாழ்வதற்கு...

பண்பாளராய் விளங்கினார்...

அழகிய முன் மாதிரி முஹம்மத் (ஸல்)

26 July 2012

யா அல்லாஹ்..!



தொழுது வந்தோம்..

எங்கள் பிழைகளை மன்னிப்பாய்..!

...நோன்பிருந்தோம்..

எங்கள் பாவங்களை மன்னிப்பாய்..!

தர்மம் அளந்தோம்....

நிறைவாக்கி கொள்வாய்..!

இணைவைக்காமல் வாழ்ந்தோம்..

மகிழ்வோடு ஏற்றுகொள்வாய்..!

முஹம்மத் நபி வழி நடப்போம்..

உன் அருளை தருவாய்..!

உன்னை ஏற்ற அடியார்களுக்கு..

பாதுகாப்பை வழங்குவாய்..!

உடல் நலன் கொடுத்து..

நிறைவான செல்வம் கொடுத்து..

பகிர்ந்து கொள்ளும் உள்ளம் கொடுத்து...

இம்மையிலும் மறுமையிலும்...

உன்னை போற்றி வாழ..!.

உன் அடியார்களாகவே வாழச்செய்வாய்..!!

11 July 2012

யா அல்லாஹ்..!



உன் அருள் கொண்டு..

பொருள் தேடும்..

உன் அடிமைதான் நாங்கள்...!

நிகரில்லாத உனக்கு..!

புகழ் போற்றும்..!

உன் அடிமைதான் நாங்கள்..!

எல்லாம் படைத்து...!

எல்லாம் கொடுத்த உனக்கு..!

உன் பண்பை உயர்த்தும்..!

உன் அடிமைதான் நாங்கள்..!

எதுவாகவும் இல்லாத எங்களை..

நுட்பமாய் படைத்து..!

சிந்தித்து வாழச்சொன்ன..

நீ ஒருவனே எங்கள் இறைவன்..!!

உன் அடிமையாய் இருந்து..

இணைவைக்காமல் வாழ்வோம்...!

23 June 2012

அல்லாஹ்.. ஒருவன்...!

எங்கள் இறையோன்..!

பெரியோன்...!

எங்கள் இறையோன்...!

... தூய்யோன்..!

எங்கள் இறையோன்...!

வல்லோன்...!

எங்கள் இறையோன்...!

தனித்தோன்..!

எங்கள் இறையோன்...!

அருள் பொழியோன்..!

எங்கள் இறையோன்..!

பொருமைவுடையோன்.!

எங்கள் இறையோன்..!

மன்னிப்போன்...!

எங்கள் இறையோன்..!

ஓர் இறையோன்..!

எங்கள் இறையோன்...!

புகழுக்கு உரியோன்...!

29 May 2012

யா அல்லாஹ்..!



உன் விருப்பத்தை பூர்த்தி..
செய்பவர்களாக..!

உன் மகிழ்ச்சியை..
... நிறைப்பவர்களாக...!

மாமறையை மனதில்..
நிறைத்தவர்களாக..!

முஹம்மத் நபிவழியில்...
நடப்பவர்களாக..!

நீ தந்த மார்க்கத்தை..
பேணுபவர்களாக.!

இணைவைக்காமல்..
வாழ்பவர்களாக...!

ஐந்து கடமையை முழுமையாய்..
நிறைப்பவர்களாக....!

உன் நம்பிக்கைக்கு..
உரியவர்களாக.!

எங்கள் வாழ்வை..
தந்தருளச்செய்வாய்...!

15 April 2012

யா அல்லாஹ்..! எங்கள் இறைவா..!!..2

யா அல்லாஹ்...!

இஸ்லாம்..
ஏற்றோம் நாங்கள்...

இறைமறையை..
படித்தோம் நாங்கள்...
...
முஹம்மத் நபிவழியில்..
 நடக்கவில்லை நாங்கள்..

அலட்சியம் செய்தோம்...
நரகத்தில் இடம் பிடிக்க..

போட்டி போட்டு..
பாவங்கள் குவித்தோம்....

மண்ணறை வாழ்க்கையை...
மறந்தே வாழ்ந்தோம்...

புறம் பேசினோம்..
இட்டு கட்டினோம்...

பொறாமை கொண்டோம்..
கோபம் கொண்டோம்...

பழி தீர்த்தோம்..
கொள்ளையடித்தோம்...

உனக்கு இணையாக..
மனிதர்களை புகழ் பாடினோம்..

வட்டி வாங்கினோம்..
வட்டி கொடுத்தோம்....

வரதட்சணை வாங்கினோம்..
வரதட்சணை கொடுத்தோம்..

இந்த இருவருக்கும்..
சாட்சியாய் இருந்தோம்...

தொழுகாமல் நேரத்தை..
விரைய்யமாக்கினோம்...

வீண்விரைய்யும் செய்தோம் ..
நிலுவை மோசடி செய்தோம்...

ஆடம்பர திருமணம் செய்தோம்..
இசையில் முழ்கினோம்...

ஓர் இறைவா..! தூய இஸ்லாத்தை..
எங்கள் உள்ளத்திலும்....

எங்கள் வாழ்க்கையிலும்..
பூக்கச்செய்வாய்...!!

27 February 2012

யா அல்லாஹ்..! எங்கள் இறைவா..!!

யா அல்லாஹ்..!
ஐந்து கடமை நிறைத்து..
வாழ உன் உதவி...!

எங்களால் பிறர்க்கு..
... பாதிப்பு ஏற்படாமலும்..

பிறரால் எங்களுக்கு..
பாதிப்பு ஏற்படாமலும்..
என்றென்றும் உன் துணை..!

எங்கள் நம்பிக்கைகள்..
தடம்புரழாமல் இருக்க..
உன் கருணை..!

வாழ்வதற்காண வழி...
முஹம்மத் நபி (ஸல்) வழியை..
எங்கள் வாழ்க்கையாக்கு..!

எங்கள் மண்ணறையை..
விசாலமாக்கு...

நரகத்தின் பிடியிலிருந்து..
எங்களை காப்பாற்று..!

மறுமை வாழ்க்கையை..
நீ விரும்பியதை போன்று..
எங்களுக்கு வழங்கு..!

உன் புகழ் ஒன்றே..!
உலகில் போற்றி போற்றி..!!

13 February 2012

யா அல்லாஹ்..!

யா அல்லாஹ்..!
பிறந்துவிட்டவரும்..
மரணித்தவரும்..

பிறக்கபோவோரும்..
... மரணிக்கபோவோரும்..

நீ விதித்தவைகளில்..
உள்ளவர்களே...!

நிலைத்தவனும்..
தீர்ப்பு நாளின்.
அதிபதியும் நீ ஒருவனே..!

மன்னிப்பதற்கும்..
தண்டிப்பதற்கும்...
நீயே உரிமையாளன்...!

முஹம்மத் நபி தந்த மார்க்கத்தை...
நீயே முழுமையாக்கியவன்....

ஓர் இறைவா..!
இணைவைத்து வாழ்பவர்கள்..
உன் கோபத்துக்கு ஆளானவர்களே..

நாங்கள் பாவத்தை தவிர...
வேறெதுவும் செய்யவில்லை...

நல்ல மூமீன்களாய்..
முழுமை பெறச்செய்வாய்..!

உனையின்றி வேறொரு..
பாதுகாவலன் இல்லை...

06 February 2012

கணவனுக்கு ஓர் கடிதம்...

அரபுதேசத்திற்கு...
சென்ற என் கணவா..!

வழியில் விழிவைத்து...
காத்திருந்தேன் கணவா..!
...
நீ வந்துவிடவா...
நான் வந்துவிடவா..!
பிரிந்து வாழ்வதற்காகவா...
மணமுடித்தோம்...?

பிரியமுடம் பேசி...
பிரிந்தே வாழ்கிறோம்..!
விரைந்துவா... விரைந்துவா.....

நம் தேசம் நம் இருவரையும்...
வாழவைக்காமலா போய்விடும்....?

இணைந்தே வாழ்வோம்..
காய்கறிகள் விற்றாவது...
காலம் கழிப்போம்...

எனக்காக எல்லாம் இழந்து..
வாழ்ந்தது போதும்...
என்னோடு வாழவா....

எந்நாளும் என்னோடு...
இருந்திடவா கணவா..!
கணவா எனை காணவா..!

29 January 2012

அல்லாஹ்வுக்கு நாங்கள் -அடிமை..!

அன்புள்ள அதிகாரமுள்ள அல்லாஹ்வுக்கு...!
உன் அடிமை உள்ளத்தால் எழுதுவது......

அளவற்ற அருளாலன்...
நிகரற்ற அன்புடையோனும் ஆவாய்..!
...
எங்கள் பாவங்கள் மன்னிக்க...
உன்னையே இறைஞ்சுகிறோம்....

சாந்தியும் சமாதானமும் எல்லோர் மீதும்..
நிலவ உன் உதவியை நாடுகிறோம்...

உன் கருணையால் நாங்கள் நலம்..!
உன் அருளினால் வலங்கள் பெற்றோம்..!

உன் ஒருவனுக்கே புகழ் சேர்ப்போம்..!
உன்னிடமே மீளுவோம்..!

கேடுகெட்ட ஷைத்தானிடமிருந்து..
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்..

இணைவைக்காமல் வாழவும்...
ஓர் கொள்கையை முழுமையாய் பின்பற்றவும்...
எங்களுக்கு உன் துணைவேண்டும்....

மறுமை என்னும் மகத்துவத்தில்..
நாங்கள் உன்னை காண ஆவல்....

இப்படிக்கு என்றென்றும் உன் -அடிமை..
நீடூர் நெய்வாசல் அ பாபு..

09 January 2012

யா அல்லாஹ்..! எங்கள் இறைவனே...!

புகழ் உனக்கு சேர்ப்போம்..!
அமைதி தருவாய்...!

பெருமை உனக்கு சேர்ப்போம்..!
பொருமை தருவாய்..!

கையேந்தி பேட்போம்..!
உன் கருணை தருவாய்..!

தொழுது கேட்போம்..!
சொர்க்கம்  தருவாய்...!

தர்மம் அளந்து கேட்போம்..!
நலமும் வலமும் தருவாய்..!

அழுது கேட்போம்..!
உன் அர்ஷின் நிழல் தருவாய்..

மன்னிப்பதிலும் தண்டிப்பதிலும்..
நீயே வல்லவன்..!

எங்கள் பலஹீனத்தால்..
தவறுகள் இழைத்தோம்..

எங்கள் மீது இரக்கம்..
காட்டுவாய்..!

உனையின்றி இயங்காத..
இவ்வுலகில் உன் துணையின்றி..
எங்களுக்கு யாரும் இல்லை..

எங்களை மரணிக்கச்செய்து..
உயிர் எழுப்பும் நீயே...
தூய்மையானவன்...

எங்கள் இறைவனும்..
புகழுக்கு உரியவனும்..
நீ.. ஒருவனே...!!