அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

04 November 2011

( நீடூர்) நெய்வாசல் நாட்டாமை தேர்தல் கோரிக்கை..

 நீடூர்- நெய்வாசல் ஜமாத்தார்களுக்கு  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ்வின் நாட்டத்தால் நாட்டாமை தேர்ந்தெடுக்கும் புதிய தலைமை..
எப்படி தேர்ந்தெடுக்கவேண்டும் இதுவரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்..
இனி மேலும் குரல் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக..
நேர்மையாக ஜனநாயக முறைப்படி இருக்காது   ஆகவே...
ஓட்டெடுப்பு மூலமே  தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்திட வேண்டும்...
அப்போதுதான் தனிமனித உரிமையை நிலை நாட்டுவதாக இருக்கும்...
எந்த ஒரு  தனிமனித ஆதிக்கமும்  நமதூரில்இனிமேல் இருக்க கூடாது..
ஊர் கட்டுப்பாடு என்பது -அடுக்கு முறையில் இருக்க கூடாது..
அதிகார பகிர்வு மூலமே தீர்வு காணமுடியும் இதற்கு ஓட்டெடுப்பு தேர்வே...
அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒற்றுமை நிலைத்து தழைத்து விளங்கும்....
ஓட்டெடுப்பில் எந்த தில்லு முல்லும் நடைபெறாமல் நேர்மையாய் நடக்க..
அல்லாஹ்வை சாட்சியாய் வைத்து நடைபெறவேண்டும்...
யார் ? தெர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஒரு கோரிக்கை...
ஊர் வரவு செலவு  மதரஸா வரவு செலவு  வெளிபடையாக இருக்கவேண்டும்.
அதற்கு கணினியில் பதிவிட்டு இணையதளத்தில் வெளியிடவேண்டும்...
அப்போதுதான்  பதவி நம் மீது கரைபடிந்த பழியை சுமத்தாது..
பொதுவாழ்வில் தூய்மையானவர்களாக இருந்தால் பதவி சுமையா...
இருக்காது எனவே ஓட்டெடுப்பு மூலம்  தேர்ந்தெடுப்போம்..
அமைதியும் ஒற்றுமையும் நாமாக இருந்து அடுத்த ஊருக்கு..
எடுத்துகாட்டாக வரலாராய் இருப்போம்  இன்ஷா -அல்லாஹ்....!

                                                                                             வஸ்ஸலாம்..
                                                                    நீடூர் நெய்வாசல்  அ பாபு....


No comments:

Post a Comment